சனி, 18 டிசம்பர், 2021

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் TAMIL SIRUKATHAIYIN THOTRAMUM VALARCHIYUM

 

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

TAMIL SIRUKATHAIYIN THOTRAMUM VALARCHIYUM

 

முனைவர் ந.இராஜேந்திரன்

தமிழ் - உதவிப்பேராசிரியர்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர் - 02

 

முன்னுரை

கதையும் கற்கனையும் மனித சமுதாளத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். மனிதன் காலம் காலமாக கதை சொல்லுவதையும் கதை கேட்பதையும் மரபாகக் கொண்டுள்ளனர். சிறுகதைகள் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பக் கூடியது.  இது எல்லா மக்களிடையேயுமுள்ள வாய்மொழி மரபாகும். நாகரீகம் வளர்ச்சி அடைவதற்கு முன்பு மக்கள் கூட்டம் கூட்டமாகவும் குழுவாகவும் அமர்ந்து கதை கூறி தமது பொழுதைக் கழித்தனர். தமிழர்கள் காலம் தோறும் பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். இராமாயணம் புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பரமார்த்த குரு கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், அபிநய கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றன அவற்றுள் சிலவாகும்.

இக்கதைகள் வாழ்வியல் ஒழுக்கங்கள், நீதி தவறாமை போன்ற பல ஒழுக்க நெறிகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் வலியுறுத்துகின்றன. இத்தகைய தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் காணலாம்.

புதன், 8 டிசம்பர், 2021

அழகிழந்த செருப்பு - கவிதை (கடங்காரக் கடவுள்) முனைவர் ந.இராஜேநந்தின்

 

அழகிழந்த செருப்பு - கவிதை (கடங்காரக் கடவுள்) முனைவர் ந.இராஜேநந்தின்

 

நெடுநாள் ஆசைப்பட்டு

ஆசை ஆசையாய் வாங்கிய செருப்பு

பலநாள் என் பாதத்தில்

படிந்திருக்க வேண்டுமென்ற வேட்கையில்

செருப்புத் தைப்பவரிடம் கேட்டேன்

கூலி என்னவென்று...

சோடிக்கு இருபது என்றார்

பதினைந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றேன்

 

ஒரு ஐந்துக்காக

காலணியைக் கலங்கப்படுத்தி

கண்களில்

கண்ணீரை வரவழைத்துவிட்டார்

 

ஒரு வாரம்தான் ஆனது

அந்தச் செருப்பு வாங்கி

அப்படியே

போட்டிருந்தால் கூட

ஆறு மாதம் உழைத்திருக்கும்

 

அவசரப்பட்டுத் தைத்ததில்

அறுபட்ட கழுத்தாய்

அழகிழந்து...

அனாதையாய்க் கிடந்தது

ஆசை ஆசையாய் வாங்கிய

அந்தச் செருப்பு .



செவ்வாய், 7 டிசம்பர், 2021

நட்பு

 

நட்பு

‘நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா’ என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். கூடா நட்பு கேடாய் முடியும் என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறார் என்றால் நாம் சிந்திக்க வேண்டும். ஆக வள்ளுவர் காலத்திலும் சரி கணினி யுகமாக விளங்கும் இக்காலத்திலும் சரி தீய செயல்கள் செய்யும் நண்பர்கள் நம்நருகில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொரானநோய்க்கு உட்பட்டவர் என்றெண்ணி தள்ளி இருப்பது நல்லது.

தீ நட்பு பெருகலின் குன்றல் இனிது

துரியோதனன் கரவாக உறவுகூறித் தன் அரண்மனைக்கு வந்துபோகும்படி தருமனை அழைத்த பொழுது அத்தீயவனோடு நட்புகொள்ளுதலினும் கொள்ளாமையிருப்பது நல்லதென்று வீமன் கொதித்துக் கூறியுள்ளது ஈண்டுக் நோக்கத்தக்கது.

வெள்ளி, 29 அக்டோபர், 2021

அன்பின் ஐந்திணை


அன்பின் ஐந்திணை

(முதல், கரு, உரி)

 

தமிழிலக்கியத்திற்கு இலக்கணம் வகுக்கப்படும் பொழுது, ஒரு திணைக்கு உரியபொருள் அத்திணையின் உரிப்பொருள் எனக் காட்டப்படுகிறது. ஐந்து நிலங்களுக்குரிய ஒழுக்கங்களாகபுணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியவையும் அவற்றின் நிமித்தமும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணைகளின் உரிப்பொருள் எனப்படும்.

அன்பின் ஐந்திணை

ஒருவனும், ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்வது குறிஞ்சித் திணை என்று பெயர் பெறுகிறது. காதலன் பொருளீட்டுவதற்கோ, போர்க்களத்திற்கோ, கல்வி கற்பதற்கோ, தூதுவனாகவோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி காத்திருப்பது முல்லைத் திணை என்னும் பெயர் பெறுகிறது. தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிணக்குகள் வரலாம். இதனை ஊடல் என்று கூறுவர். இந்த ஊடலைக் குறிக்கும் திணை மருதத் திணை எனப்படும். கடலில் மீன் பிடிக்கச் சென்றோ, பிற காரணங்களாலோ தலைவன் பிரிந்து சென்று, திரும்பி வர இயலாத சூழலில் தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கி நிற்றலை நெய்தல் திணை என்பர்.

வியாழன், 28 அக்டோபர், 2021

எழுத்துகளின் பிறப்பு

 

எழுத்துகளின் பிறப்பு

 

தமிழ் எழுத்துகளின் வகைகள் பற்றியும் அதன் தொகை பற்றியெல்லாம் அறிந்துகொண்ட நாம், அடுத்து எழுத்துகள் எவ்வாறு எங்குப் பிறக்கின்றன என்பதையும் அறிந்துகொள்ளுதல் வேண்டியது அவசியமானதாகும். எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள்.

 

உயிர் தங்கியுள்ள உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய இடங்களில் தங்கி, உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன.

 

எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

புதன், 27 அக்டோபர், 2021

முனைவென்றியில் உள்ள பழைமையான சிவன் கோயில்

 

முனைவென்றியில் உள்ள பழைமையான சிவன் கோயில் இது. மதுரையை ஆண்ட பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம். ஆனால் எந்தப் பாண்டியர் காலம் என்று தெரியவில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாள்முதல் பூசை நடந்ததில்லை. சமிப காலமாக அந்த லிங்கத்திற்கு அருகில் உள்ள வயல்காரர் எப்பவாவது வெள்ளி, செவ்வாய் கிழமையில் பூ போட்டு சூடம் ஏத்தி சாமி கும்பிடுவார் என்கிறார் செ.அன்னதாஜ்.

ஆக கருங்கல்லால் லிங்கத்தின் பீடமும் லிங்கம் எட்டுப் பட்டையாகவும் இருப்பாதல் (லிங்கத்தைக் காணவில்லை) கோயில் கல்லால் ஆன கோயிலாக இருக்கலாம் என அவதானிக்க முடிகிறது. ஆனால் கோயில் போர்க் காரணமாக அழிக்கப் பட்டதா? அல்லது இயற்கையாகவே அழிந்து போனதா? எனத் தெரியவில்லை. கோயில் இருநததர்கான அடையாளமும் அழிக்கப்பட்டுள்ளது. 

லிங்கத்திற்கு அருகே ஒரு செம்பிரான் கல் ஒன்று மட்டும் கிடக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது கோயில் செம்பிரான் கல்லால் எழுப்பப்பட்டதாகவும் இருக்கலாம்.




புதன், 22 செப்டம்பர், 2021

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது

 

தமிழ்விடு தூது

மதுரைச் சொக்கநாதரிடம் காதல் கொண்ட தலைவி தன் காதலைத் தெரிவித்து அவர் இசைவறிந்து வருமாறு தமிழைத் தூதனுப்பி வைப்பதாகப் பாடப் பெற்றுள்ளது. 268 கண்ணிகள் இதில் உள்ளன. ஆனால் தலைவியின் காதலைச் சொல்வதோ, மதுரைச் சொக்கநாதரின் பெருமையைச் சொல்வதோ முக்கியமல்ல. தமிழ்தான் இந்த நூலின் தலைமைப் பொருள். துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க மறவாதே தூது சொல்லி வா என்று வழக்கமாகத் தலைவி தூது விடும் பாங்கில் அமைந்தாலும், தமிழே நம் கவனத்தை யெல்லாம் ஈர்த்துக் கொள்கிறது.

 

தமிழ்விடு தூது சிறப்பு

தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்  இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது.

வியாழன், 16 செப்டம்பர், 2021

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

 

 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.(குறள்.20)

 

 

01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

 

02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

 

03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

 

04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி.

 

05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

 

06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

 

07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

 

08. *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

 

09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

 

10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

திங்கள், 13 செப்டம்பர், 2021

தமிழர் இசைக் கருவிகள் - திருமுறைகளில் இசைக்கருவிகள்

 


தமிழர் இசைக் கருவிகள்

முனைவர் ந.இராஜேந்திரன்

 

மனிதனின் உள்ளத்தைத் தன்வயமாக்கி நிரப்பி அவ்வளவோடு நில்லாமல் வெளிப்படும் ஆற்றலே கலை.

 

கூடுதல் குறைதல் இன்றி எப்பொருளும் அளவோடு அமைந்திருப்பின் அந்த அமைப்புக் கண்ணைக் கவர்வது இயல்பு. கண்ணையும் கருத்தையும் கவரும் அந்த அமைப்புப் பாராட்டத்தக்கதாகும். அதனைக் கலை அறிவோடு அமைக்கப்பட்டது என்று நாம் பாராட்டுகிறோம். எனவே கலை என்பது அளவும் பொருத்தமும் தன்னுள் அடக்கி நிற்பது. அதே சமயத்தில் உள்ளத்திற்கு உவகை ஊட்டுவது. உள்ளத்தை தன்பால் இருப்பது.

 

இசையின் சிறப்பு

இசை என்னும் சொல் இசைவிப்பது - தன் வயப்படுத்துவது எனப் பொருள்படும் இசை கல் மனத்தையும் கரைந்துகச் செய்யும். கற்போரும் மற்றொரும் இசையின் வயப்பட்டே நிற்பர். அன்பைப் பெருக்கி ஆருயிரை வளர்ப்பது இசை. இசையைக் கேட்டு இன்புறாத உயிர்கள் இல்லையென்றே கூறலாம். விலங்குகள், பறவைகள், செடிகள், பாம்பு முதலிய உயிர்கள் இசையில் இன்பமடைகின்றன. பால் வேண்டி அழும் பசுங் குழவியும் இசை வயப்பட்டுப் பாலையும் பசியையும் மறந்து கண்கள் செருக மகிழ்ச்சியடைகின்றது. இசையின் பயப்படாதார் அன்பின் வயப்படார் என்றே கூறுதல் அமையும். இசையின் அருமையையும் பெருமையையும் ஓர்ந்தே தமிழர் இசைத் தமிழை முத்தமிழுள் நடு நாயகமாக வைத்துள்ளனர். தமிழ் இலக்கிய நூல்கள் இசைத் தமிழிலேயே இருக்கின்றன என்பர. மா.இராசமாணிக்கனார் (தமிழகக் கலைகள், 2009:55)

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

ஞாபகம் - அப்பா, இளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)

 மகனின் பிஞ்சுவிரல் பற்றி

நடக்கும்போதெல்லாம்

என்னைப் பின்னுக்குத்தள்ளி

முந்திச் செல்கின்றன

என்

அப்பாவின் ஞாபகங்கள்

     - இளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)



செவ்வாய், 7 செப்டம்பர், 2021

கவிதை, kavithai, பேசும் தருணம், காதல்

 


        உன்னிடம்

        பேசும்போது மட்டும்

        சம்பந்தமில்லாத

        ஏதோ ஒன்றைப் பார்த்துதான்

        பேசவேண்டியிருக்கிறது

        காதலின் மகத்துவம்

        மனதுக்குத் தெரியும்

        கண்ணுக்குத் தெரியுமா?

                              - இளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)



ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

சமூதாயம் - கடங்காரக் கடவுள், கவிதை (kavithai )

 

உன்னுடைய மாட்டுக்கு

மூக்கணாங்கயிறு பூரூவதும்

கொட்டுக்கால் அடிப்பதும்

இழுத்துக் கட்டுவதும்

என் வேலையில்லை.


அடங்காத மாட்டை

ஏர்க்காலில் பூட்டுவதும்

வண்டி இழுக்கப் பழக்குவதும்

பழகாத மாட்டுக்குத்

தார்க்குச்சி எடுப்பதும்

என் வேலையில்லை


மாட்டைப் பழக்குவதையே

முழுநேர வேலையாகச் செய்யும்

ஒரு கூட்டம் உண்டு என்பதற்காக

நானும் அப்படியே இருக்க வேண்டுமென

நீ

நினைப்பது அபத்தம்.









செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கவிதை, அப்பா கவிதை, அம்பலம், உப்பு மூட்டை

 


அம்பலம்

        எனக்கான குணாதிசியங்களை

        விதைக்கவே முற்படுகிறேன்

        எப்படியேனும்

        என்னை முழுக்காட்டிவிட்டு

        அம்பலமாகி விடுகின்றன

        அப்பாவின் குணாதிசியங்கள்

                      - இளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)




சனி, 28 ஆகஸ்ட், 2021

இலக்கியத்தின் சுவைக்கு வலிமை சேர்க்க வரலாறு பதிவு செய்யப்படுகிறது

 

முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


கூடுதல் வலிமைக்காக

      வாய்மொழி இலக்கியமாகத் தொன்றுதொட்டு வழங்கிவந்த பாடல்கள் பின்பு வரிவடிவம் பெற்றுச் சங்க இலக்கியமாக உருமாறின. இச்சங்க இலக்கியங்களில் அகத்திணையாயினும் புறத்திணையாயினும் பெரும்பான்மை வரலாற்று நிகழ்வு இடம்பெறாத பாடல்கள் இல்லை. அந்த அளவிற்கு வரலாறு குறித்த புரிதல்கள் சங்கப் புலவர்களிடம் இருந்திருக்கின்றது. இத்தகைய வரலாற்றுப் புரிதல்கள்தான் சங்ககால மக்களின் சிறப்புகளை உலகறியப் பறைசாற்றின.

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மொழிக் கற்றல்/கற்பித்தல் - பன்னாட்டு மாநாடு, (International Conference on Language Teaching and Learning in South East Asian countries)

 

தமிழ்த்துறை, பூசாகோஅர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி(த.) - கோயமுத்தூர்

மொழித்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(த.) - கோயம்புத்தூர்.

அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்

செம்மொழி நிறுவனம் - மலேசியா

கல்பனா கலை மற்றும் படைப்பு அகடாமி - பிரான்சு

இனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்

 

இணைந்நு நடத்தும்

 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மொழிக்

கற்றல்/கற்பித்தல் - பன்னாட்டு மாநாடு

 

International Conference on Language Teaching and

Learning in South East Asian countries

 

அறிவிப்பும் அழைப்பும்

 

நாள் : நவம்பர் 00 2021

நேரம் : முற்பகல் 10.00 - பிற்பகல் 4.00

வழி : இணையம்

 

தொடர்புக்கு :

+91 9600370671, +91 8825792051, +91 9597536324








ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

அப்பா கவிதை (சோட்டைக்கு ஒரு நாள்) Appa Kavitha

 

எவ்வளவு

வலியும் வேதனையும் இருந்திருக்கும்

இந்த வார்த்தையை  உதிர்க்க


அப்படி 

என்ன கேட்டுவிட்டார் என்னிடம்?

உன்னைப் பார்த்து ரெம்ப நாளாச்சு

சோட்டைக்கு ஒரு நாள்

வந்து தங்கிட்டுப் போடா - என்றார்


என் மகனுக்கு

உடல்நிலை சரியில்லை

அடுத்த மாதம் வரட்மா - என்றேன்


இப்படித் தானே

நானும் உன்னை வளர்த்தேன்

என்றதோடு  அணைந்துவிட்டது கைபேசி

                                               - இளையவன் தமிழ் ( ந.இராஜேந்திரன்)



சனி, 14 ஆகஸ்ட், 2021

வரலாறு பதிவு செய்வதற்கான பின்புலம் (1. உவமையாக)



       முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


வரலாறு பதிவு செய்வதற்கான பின்புலத்தினைப் பின்வரும் ஐந்து நிலைகளில் பகுத்து விளக்க முடிகிறது.

      1. உவமையாக

     2. வாசகனின் உயர் சிந்தனைக்காக

     3. உயர்வு நவிற்சியாக

     4. கூடுதல் வலிமைக்காக

     5. வரலாற்றுணர்வை அறிவதற்காக

 

மேற்குறிப்பிட்ட ஐந்து கருத்துப் புலப்பாட்டு நெறிகளும் உவமை (உவமையாக) எனும் உத்திக்குள் ஏனைய நான்கும் அடங்கும் என்றாலும் இடம்பொருள் விளக்கத்திற்காகவும் நுண்ணிய வேறுபாட்டிற்காகவும் தனித்தனியாக விளக்கப் பெறுகின்றன.

 உவமையாக

      உவமை என்பது கவிஞனின் அனுபவப் பொருளாகும். பொருள் என்பது கவிஞன் காணும் புதிய பொருளாகும். கவிஞன் ஏற்கனவே கண்டு வைத்தபொருளைப் புதிதாகக் காணும் பொருளோடு பொருத்திப் பார்த்து அப்பொருளின் உயர்வு, தாழ்வுகளை அளந்து அறிவிக்கின்றான். பொதுவாகப் பொருளின் சிறப்பை உணர்த்துவதற்கு உவமை கையாளப்படுகின்றது.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

புறப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்

 

புறப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்


முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


      சங்க இலக்கியப் புறப்பாடல் முறைமையில் உள்ள சுவை அல்லது அதனுடைய வீர அம்சங்கள் வரலாற்றைப் பதிவுசெய்யும் கவித்துவம் என்ற நிலையில் முக்கியத்துவமானதாக நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. புற இலக்கியத்தில் ஆட்சியாளர்களுக்குப் புலவர்கள் சில கருத்துக்களை அறிவுறுத்திக் கூறுகின்ற பண்புகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியப் புறத்திணைக் கூறுகளில் வரலாற்றுப் பதிவுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இடங்களில் உவமையாகவும் உள்ளுறையாகவும் பதிவுசெய்யப் பெற்றுள்ளன. இப்பதிவுகள் அரசர்களைப் புகழ்வதும், புகழ்கின்ற அரசனிடம் உதவி கேட்பதும், தங்களுடைய சுக துக்கங்களை வெளிப்படுத்திக் கொள்வதும் புறத்தினுடைய நுண்ணிய அம்சங்களாகும். ஏனென்றால் அது வரலாற்று இருப்பைச் சார்ந்தது. இவ்வரலாற்று இருப்பைப் பிற மன்னர் வரலாற்றோடு ஒப்புமைப்படுத்தி முன்னைய வரலாற்று நிகழ்வினை நினைவுகூறும் வண்ணம் புற இலக்கியங்கள் கட்டமைக்கப் பெற்றுள்ளன.



ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

அகப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்

 

அகப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்


முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


      சங்க இலக்கிய அகத்திணைக் கூறுகளில் வரலாற்று நிகழ்வு பற்றிய பதிவுகள் நேரடியாக மட்டுமல்லாது பல இடங்களில் உவமையாகவும், உள்ளுறையாகவும் பதிவுசெய்யப் பெற்றிருக்கின்றன. இப்பதிவுகள் செவிலிக் கூற்றாகவோ,  தோழி கூற்றாகவோ தலைவி கூற்றாகவோ இருக்கலாம். இக்கூற்றுகளின் வாயிலாகத் தான் பார்த்த அல்லது கேட்ட வரலாற்று நிகழ்வுகளைப் பலரும் அறியும் வண்ணம் புலவர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

 

      அகமாந்தர்கள் தங்கள் அக உணர்வுகளை வெளிப்படுத்தும் நிலையிலும் தான் சார்ந்த அல்லது தன்னைச் சார்ந்த உறவுகளின் மனநிலையை, செயல் நிலையை வெளிப்படுத்தும் நிலையிலும் புறநிகழ்வுகளை அதாவது வரலாற்றுச் செய்திகளை ஒப்பீட்டு நோக்கில் பதிவுசெய்துள்ள திறத்தினை அறிய முடிகின்றது.




வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக் கட்டுரை எழுதுதல் (Writing a research paper in an international standard)


கோயம்புத்தூர், தமிழ்த்துறை-பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி (த.),  
கோயம்புத்தூர், மொழித்துறை- இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), 
தஞ்சாவூர், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் , 
மலேசியா, கிளாசிகல் மொழிகள் நிறுவனம் பி.எல்.டி, பிரான்சு 
கல்பனா கலை மற்றும் படைப்பு அகாடமி, 
இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் 
ஆகியன இணைந்து நடத்தும்

பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக் கட்டுரை எழுதுதல் 
(Writing a research paper in an international standard)

இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்

நாள்:14.08.2021 

நேரம்: முற்பகல் 10.00 மணி

நிகழவுள்ளது. இப்பயிலரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு செய்தல் அவசியம்.

முன்பதிவு செய்ய :- 

மின்சான்றிதழ் உண்டு.

நன்றி
அனைத்து நிறுவனங்களுக்கும்
அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும்
தொடர்புக்கு - 9597536324


குறிப்பு 
மேலே குறிப்பிட்டுள்ள இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் உலகளவில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கான ஒத்திகை.



வியாழன், 5 ஆகஸ்ட், 2021

வரலாறு : இலக்கியத்தில் பதிவு செய்ததற்கான பின்புலம்

 

வரலாறு : இலக்கியத்தில் பதிவு செய்ததற்கான பின்புலம்


முனைவர் ந.இராஜேந்திரன்

மொழித்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

கோயம்புத்தூர் - 28.

      படைப்பாளி தான் வாழ்ந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த அல்லது பார்த்த அல்லது கேட்ட வரலாற்று நிகழ்வினை இலக்கியத்தில் ஏன் பதிவுசெய்தான், அப்பதிவிற்கான பின்புலம் என்னவென்பதை ஆராயும் முகமாக இப்பகுதி அமைகின்றது.

      சங்க இலக்கியக் காலக்கட்டம் முதற்கொண்டு புலவர் மரபு அல்லது படைப்பாளி தான் படைக்கக் கூடிய படைப்பில் வரலாற்றினைத் தனித்துவப் படுத்தியும் பிற இலக்கியத்தோடும் வரலாற்று நிகழ்வினை இணைத்தும் படைக்கும் பழக்கம் இருந்திருக்கின்றது. எனவே இந்தியர்கள் வரலாற்று உணர்வில்லாதவர்கள், அவர்கள் தங்களது வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்து வைக்கவில்லை என்பது ஒரு பொதுஜன நம்பிக்கை. (2008:8). இந்தியர்கள் தங்களது ஆவணங்களைப் பாதுகாத்துத்தான் வைத்திருக்கிறார்கள். எவை முக்கியத்துவமானவை எனப் பண்டைய இந்தியர்கள் கருதினார்களோ அவற்றையெல்லாம் காப்பாற்றி வைத்துள்ளார்கள். கொடி வழிப்பட்டியல்கள், கோயிலொழுகுகள், விகாரை வரலாறுகள் போன்ற சில சமய நிறுவனங்களின் சரித்திரங்கள் இவையெல்லாம் இன்று கிடைக்கின்றன. இவை வரலாற்று மரபின் மூலப் பகுதிகள்தாம் என்பர் ரொமிலாதாப்பர்.

      எழுத்து மொழி ஆவணங்கள் வரலாற்றுக்கு மிக முக்கியமான சான்று. எழுத்துமொழியின் வரலாறு நினைவுகளை, கடந்தகால எச்சங்களை, நடந்து முடிந்தவைகளை அடிப்படையாகக் கொண்டது. எழுத்தின் நிலைத்த தன்மை, மீண்டும் பார்க்க அது தரும் வாய்ப்பு என்கிறார் ப.மருதநாயகம் (2004:ப.xxv). இத்தகைய எழுத்துமொழி உருப்பெறக் காரணகாரியமாக இருந்தவை வாய்மொழிப் பாடல்கள். இவ்வாய்மொழிப் பாடல்களைப் பாடிவந்தவர்கள் பாணர் மரபினைச் சேர்ந்தவர்கள். ‘இப்பாணர் மரபின் சத்தான பகுதிகளைச் செறித்துக் கொண்டுதான் புலவர் மரபு தோற்றம் பெற்றது’ என்பர் பிரபஞ்சன் (உயிர்மெய்-மாதஇதழ்). இம்மரபின் வழியாகத்தான் சங்க இலக்கியங்கள் ஓலைச் சுவடியில் எழுத்துருக்கொண்டு சங்கத் தமிழரின் வரலாற்றுப் பேழையாகக் காட்சியளிக்கின்றன.

      வாய்மொழியாக வழங்கும் தரவுகளைப் பயன்படுத்தி வரலாறு எழுதும் முறை மிகவும் பழைமையான ஒன்று. ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா குடியரசுகளுக்கிடையே கி.மு.431 தொடங்கி கி.மு.404 முடிய நிகழ்ந்த பெலப்பனீசியப் போர் குறித்துத் தூஸிடைஸ் (1960:22) என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் பெலப்பனீசியப் போர் என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலை எழுதுவதற்கு வாய்மொழிச் சான்றுகளைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பின்படி ஒரு நாட்டின் வரலாற்றை நிர்ணயிப்பதில் வாய்மொழிச் சான்றுகளும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன என்பது தெளிவாகின்றது.

      இத்தகைய வாய்மொழிப் பாடல்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற சங்க இலக்கியத்தில் அகம் காதல் குறித்துப் பேசினாலும் அவற்றினூடே புறநிகழ்வுகளும் பதிவுசெய்யப் பெற்றுள்ளன. புறம் மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், இன்னபிறரின் வரலாறுகள் குறித்தும் பதிவுசெய்யப் பெற்றுள்ளன. இப்பதிவுகளின் பின்புலத்தினை இருநிலைகளில் பகுத்து விளக்க முடிகிறது.

     1. அகப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்

     2. புறப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்.






செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

வரலாறு குறித்து பிற நாட்டு அறிஞர்கள் கருத்து

 

வரலாறு குறித்து பிற நாட்டு அறிஞர்கள் கருத்து


முனைவர் ந.இராஜேந்திரன்

மொழித்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

கோயம்புத்தூர் - 28.

ilayavantamil@gmail.com


வரலாறு குறித்துத் தமிழ் அறிஞர்கள் போல் பிற நாட்டு அறிஞர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அக்கருத்துகள் பின்வருமாறு:

      வரலாறு என்பது கலையும் அறிவியலும் கலந்ததொரு இனிய கலவை என்பது டிரெவெல்யான் (Trevelyan) போன்ற வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.(ப.2). இக்கருத்தே பெரும்பாலருக்கும் ஏற்புடையதொன்றாகும் என்கிறார் தி.இராசகோபாலன்.

      கடந்த காலம் என்னும் எல்லையில்லாப் பெருவெளியில் காலத்தச்சன் காட்டியுள்ள அனுபவம் என்னும் மாபெரும் கோபுரமே வரலாறு (1962:8) (H.W.வான்லூன்). இப்பழம்பெரும் கோபுரத்தின் கொடுமுடியில் ஏறி, அங்கிருந்து அப்பெருவெளியின் முழுத்தோற்றத்தைக் காணமுயல்வது எளிய செயலன்று எனினும் இளைஞர்கள் ஆற்றல் மிக்கவர்கள். அவர்கள் முயன்றால் அப்பெருவளியின் முழுத் தோற்றத்தையும் காணலாம் என்று (H.W.வான்லூன் கூற்றினைக் க.த.திருநாவுக்கரசு தம் நூலில் சுட்டிக் காட்டுகின்றார்.

      அரிஸ்டாடில் (Aristotle) என்னும் கிரேக்கப் பேரறிஞர் நிகழ்ந்தது மறுபடி நிகழாது என்பது வரலாற்றின் தன்மை (2004:6) என்று வரலாற்றின் இயல்புநிலையைச் சுட்டுவார். 

      வீரதீரர்களின் வாழ்க்கை வரலாறுகளின் தொகையே வரலாறு என்பது எமர்சன் (Emerson), கார்லைல் (carlyle) ஆகியோர் கருத்து. பியூரி (J.B.Bury) என்பார் ‘அது ஒரு விஞ்ஞான இயல் போன்றது’ அவ்வளவே என்கிறார். ‘மனிதர் பல்வேறு சுதந்திரங்களுக்காக இடும் இடைவிடாப் போர்தான் வரலாறு எக்காரணத்திற்காகவேனும்’ என்றவர் ஆக்டன் பிரபு (Lord Acton), காலிங்வுட் (Colling wood) முதலியோர். அது வரலாற்றாளரின் கற்பனைக் காட்சி என்றனர். பலர் அக்கருத்தை ஏற்றனர். வால்டேர் (voltaire), கிப்பன் (Gibban) என்போர், அது மக்களினத்தின் குற்றம் குறைபாடு ஆகியவற்றின் கதை என்றனர். ஹென்றிபோர்டு (H.Ford) மற்றும் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் (Napoleon) என்போர் வரலாற்றைப் பொய்யின் பெரும்பொதி என்றனர். ஈ.எச்.கார் (E.H.Carr) அது நிகழ்ச்சித் தொகுதிக்குப் பொருள்காண்பது, உரை கூறுவது (interpretation) என்றார். அஃதாவது வரலாற்றிற்கு மொத்தமாகப் பார்க்குமிடத்து ஒரு பொருள் உண்டு என்று அவர் கருதியது போதரும். ஆதலால்தான் அவர் வரலாற்றிற்குக் கார்ல்மார்க்ஸ் (Karlmarx) என்பாரைப் போலப் பொருள் (Meaning and not wealth) தேடி அது வரலாறு என்ன கூறுகிறது என்பதைக் கண்டுபிடித்துரைத்தல் (interpretation) என்றார். இவையெல்லாம் அவரவர்கள் வாழ்க்கை அனுபவ வாயிலாகவும், கற்ற கல்வி, படித்த நூல்கள் முதலியவற்றின் தன்மையாலும் தாக்கத்தாலும் பெறப்பட்டவை. (2004:6).

      வரலாறு கற்பனைக் கதையன்று, உண்மை என்று நம்பத்தக்க சான்றுகளின் உதவிகொண்டு நாம் ஏற்றுக்கொள்ளும் ஒருசெய்தித் தொகை என்கிறார் ஈ.எச்.கார் (2004:4).

      பொது நோக்கமாகப் பார்த்தால் இதுகாறும் நடந்தவை எல்லாம் வரலாறு (ப.2). என்ற ஹென்றி ஜான்சன் (Henry Johnson) கருத்தினை மேற்கோள் கட்டியுள்ளார் ஆர்.திருஞானசம்பந்தம்.

      மனித இனம் கூறியது, செயலாற்றியவை, அவற்றிற்கு மேலாக அவர்கள் நினைத்த எண்ணங்கள் யாவுமே வரலாறு (பக்.2-3).என்பர் மெயித்லாந்து (Maitland).

      குற்றங்களையும் இடையூறுகளையும் வருணிப்பது வரலாறு என்று வால்டேர் (Voltaire) கூறுகிறார். மனித இனத்தின் குற்றச்செயல்கள், தவறுகள், இடையூறுகள் போன்றவற்றின் பதிவேடுதான் வரலாறு(ப.7).என்று கிப்பன் (Gibbon) கூறியுள்ளார்.

      நாட்டு மக்களைப் பற்றியும் வரலாற்றில் கூறவேண்டுமென்றும், வரலாற்றைச் சமூகமயமாக்க வேண்டுமென்றும் கூறுவர் (ப.9). ரூஸோ (Rouseau) (கி.பி.1712-78).

      மேற்குறித்த பதிவுகளை நுணுகிப் பார்க்கும்போது வரலாற்றின் பொருள் விரிந்தது என்பதும், அது காலந்தோறும் விரிந்து வளர்ந்து வருகின்றது என்பதும் தெளிவாகின்றது. இதன்வழி வரலாறு நிலையானது அல்ல. காலமாற்றத்திற்கு ஏற்பவும், கிடைக்கும் தரவுகளுக்கு ஏற்பவும், மக்கள் மன மாற்றத்திற்கு ஏற்பவும் மாறக்கூடியது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.