சனி, 2 நவம்பர், 2019

பழந்தமிழ் நூல்களின் முகப்பு அட்டைகள்




பழந்தமிழ் நூல்களின் முகப்பு அட்டைகள்

முனைவர் ந. இராஜேந்திரன்,
தமிழ் உதவிப்பேராசிரியர், மொழித்துறை,
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
கோவை - 28.

பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்னணியில் உருவான அச்சுச் சாதன வெளிப்பாட்டு வடிவங்களுள் ஒன்று ‘புத்தகம்’ தமிழ்ச் சமுகப் பண்பாட்டு வரலாறு குறித்த முழு விவாதத்திற்கு ஆவணமாகத் திகழ்பவை இவை. இந்த அச்சேறிய நூல்களின்வழி அறிவுத்தளத்தைப் பொதுவெளியில் பரப்புவதற்கு முயன்ற ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர் உ.வே.சாமிநாதையர் (ப.சரவணன், சுவாமிநாதம், 2015). இவரைப்போன்றே ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் போன்ற சிலர் ஏட்டுச்சுவடிகளில் தவழ்ந்த பழந்தமிழ் நூல்களைக் காகிதப்பிரதிக்கு அரியனை ஏற்றி  உயிர்கொடுத்து ஆவணப்படுத்தினர்.
அவ்வாறு ஆவணப்படுத்திய  பழந்தமிழ் நூல்கள் இன்று மீண்டும் விளிம்புநிலையில் உயிருக்குப் போராடுகின்றன. இவ்வாறு விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட பழந்தமிழ் நூல்களைத் தேடிக்கொணா;ந்து சாகாவரம் பெற்ற கணினியில் பதிவேற்றம் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால்தான் இனிவரும் தலைமுறையினர் தமழ்மொழியின் சிறப்புப் பற்றியும் தமிழின் தொன்மை பற்றியும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

அவ்வாறான நூல்களின் முகப்பு அட்டைகள் கீழே அடைவுபடுத்திக் கொடுக்கப்பெற்றுள்ளது. இம்முகப்பு அட்டைகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மையநூலகம், கோவிலூர் மடாலய நூலகம், மதுரைத் தமிழ்ச்சங்க நூலகம், மதுரை சாந்தி முருகேசன் தனிநபர் நூலகம், பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி சிதம்ர அடிகள் நூலகம் முதலிய பல்வேறு நூலகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. (அனைத்து நூலகத்தாருக்கும்,   நூலகருக்கும் நன்றி).

சங்கப் புலவர்களின் அறிவியல் அணுகுமுறை எடுத்துரைப்பியல் நோக்கு


சங்கப் புலவர்களின் அறிவியல் அணுகுமுறை
எடுத்துரைப்பியல் நோக்கு
முனைவா் ந.இராஜேந்திரன்
தமிழ் – உதவிப்பேராசிரியா்
இந்தூஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர்  - 641 028.


       ரு பொருளைப் பற்றிய செய்திகளைப் பிறர்கூறக் கேட்டோ அல்லது கண்ணால் பார்த்தோ அதன் பருப்பொருளை மற்றும் அறிந்துகொள்ளும் பொது அறிவு வேறு. கண்டு கேட்ட செய்திகளைத் தன் நுண்மாண் நுழைபுலம் கொண்டு அவற்றுள் பொதிந்து கிடக்கும் உட்பொருளை அறிந்துகொள்ளும் பகுத்தறிவு வேறு. இதைத்தான் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்கிறார் வள்ளுவர்.

       இதைத் தான் உற்று நோக்கி ஆராய்தல் (observation) என்பர் அறிவியலார். இவ்வாறு உற்று நோக்கி ஆராய வேண்டிய அறிவியல் (Science) உண்மைகள் பல சங்க இலக்கியங்களுள் பொதிந்து கிடக்கின்றன. ஆனால், சங்க இலக்கியங்களைப் பயிற்றுவிg;போரும் பயில்வோரும் அவற்றை அறிவியற்கண் கொண்டு பார்க்கின்றானரா எனில், பெரும்பாலோர் அகம், புறம் இலக்கிய நயம் என்ற அறிவிலே நின்று விடுகின்றனரே அன்றி, அறிவியல் உண்மைகளை சிந்திப்போரும் சிந்திக்கத் தூண்டுபவரும் மிகச் சிலராகவே இருக்கக் காண்கிறோம். அந்த வகையில், சங்கப் புலவர்களுக்கு இயற்கையிடத்து ஈடுபாடும், தம்மைச் சுற்றியிருந்த உயிரினங்களை நுணுகிப் பார்க்கும் ஆற்றலும் மிக்கிருந்தமை நமக்கு நன்கு புலப்படுத்துகின்றது. தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது போல பிரஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற வேறு எம்மொழி இலக்கியத்திலும் இத்துணை அரிய அறிவியற் செய்திகள் காணப்படவில்லை என்று பன்மொழியறிஞர்கள் ஒத்துக்கொள்கின்றனர். இத்தகைய சிறந்த நுண்மாண் நுழை புலத்தினராய் விளங்கிய பழந்தமிழ்ப் புலவர் தம் பன்முக ஆற்றலையும் சங்கப் பனுவல்கள் பொதிந்து கிடக்கும் அறிவியல் செய்திகளையும் இனம் கண்டு  இளம் அறிவியல் பயிலும் மாணாக்கர்களுக்கும் ஆய்வு மாணாக்கர்களுக்கும் எடுத்துரைத்தல் வேண்டும்



வியாழன், 10 அக்டோபர், 2019

சங்க இலக்கியத்தில் போரெதிர்வும் இருப்பும், கடங்காரக் கடவுள்

சங்க இலக்கியத்தில் போரெதிர்வும் இருப்பும், கடங்காரக் கடவுள்
முனைவர் ந.இராஜேந்திரன், Dr N. RAJENDRAN






தொல்லியல் கள ஆய்வு ,

தொல்லியல் கள ஆய்வு ,எட்டிசேரி, நாகமுகுந்தன்குடி ஆகிய இடங்களில் கள ஆய்வு செய்த போது எடுத்த படம்
முனைவர் ந.இராஜேந்திரன் Dr N.Rajendran






தொல்புலத்தின் சார்பாக தொல்லியல் கள ஆய்வு

தொல்புலத்தின் சார்பாக தொல்லியல் கள ஆய்வு 

முனைவர் ந.இராஜேந்திரன்








சிறப்பு விருந்தினர், பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, எல்லீஸ்பேட்டை, ஈரோடு

முனைவர் ந.இராஜேந்திரன்
சிறப்பு விருந்தினர், பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, எல்லீஸ்பேட்டை, ஈரோடு