வெள்ளி, 24 மார்ச், 2023

அபிராமி அந்தாதி - அபிராமிபட்டர், கருத்தன, எந்தை தன் கண்ணன்

 




அபிராமி அந்தாதி - அபிராமிபட்டர்

 

அனைத்தும் வசமாக

 

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்

பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்

திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்

முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்து என்முன் நிற்கவே.

செவ்வாய், 21 மார்ச், 2023

முல்லைப் பாட்டு - நப்பூதனார்

 




முல்லைப் பாட்டு

-     நப்பூதனார்

 

பத்துப்பாட்டில் நான்கு ஆற்றுப்படைகளுக்குப் பின் வைத்து எண்ணப்படுவது முல்லைப்பாட்டு. இது அகம் சார்ந்த நூல். 103 அடிகளைக் கொண்டது. பத்துப்பாட்டு நூல்களுள் அளவில் மிகச் சிறியது. இதன் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இந்நூல் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது எனினும் தலைவன் பெயர் பாட்டில் கூறப்படவில்லை. இந்நூல் நெஞ்சாற்றுப்படை எனவும் அழைக்கப்படுகின்றது.