அகநானூறு
எட்டுத்தொகை நூல்களுள்
குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும்
அகப்பொருள் பற்றியன. இதில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த
பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். ஆயினும் அவற்றுள் அகம் என்னும்
சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பாடல்கள் நானூறு
தொகுக்கப்பட்டு அகநானூறு என்ற பெயரால் குறிக்கப்பட்டன. பாண்டியன்
உக்கிரப்பெருவழுதி என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மன் என்ற புலவர்
இந்நூலைத் தொகுத்துள்ளார். 145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும் பாடியுள்ளனர். இந்நூல்
13
அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நீண்ட பாடல்களைக் கொண்டிருப்பதால்
இந்நூலுக்கு நெடுந்தொகை என்ற வேறு பெயரும் உண்டு. இது அருகிய வழக்காகவே உள்ளது. களிற்றியானை நிரை (1-120), மணிமிடை பவளம் (121-300), நித்திலக்
கோவை (301-400) என்ற மூன்று
பிரிவுகளைக் கொண்டது இந்நூல். களவு, கற்பு என்ற இரு ஒழுக்கத்தில் அமைந்த முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய திணைப்பாடல்களைக் கொண்டது.
அகநானூறு - 262
திணை : குறிஞ்சி.
பாடியவர் : பரணர்
விழுமியம் : குற்றமும் தண்டனையும்
கூற்று : இரவுக்குறி வந்து
தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சுக்குச்
சொல்லியது.
கூற்று விளக்கம்: இரவுக்குறியி வந்து தலைவியின் நலனை நுகர்ந்து மீளுகின்ற தலைவன் புணர்ச்சி இன்பத்தால் பெரிதும் மகிழ்ந்து தன்
நெஞ்சிற்குச் சொல்லியது
“முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு
பல பூண்ட உழவுறு செஞ் செய்,
இடு
முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை
அமன்ற பயறு ஆ புக்கென,
வாய்
மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, 5
ஊர்
முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும்
உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின்
கொண்ட படிவம் மாறாள்,
மறம்
கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு
இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் 10
இன்
உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி
போல, மெய்ம் மலிந்து,
ஆனா
உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி
ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண்
பல் துவலை புதல்மிசை நனைக்கும் 15
வண்டு
படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல்
மா மலை நாறி,
அம்
தீம் கிளவி வந்தமாறே.” (பரணர் - 262)
அன்னி மிஞிலி என்பவளின் தந்தை வயலை உழுதபின் உழுத எருதுகளை மேய விட்டிருந்தான்.
உழுத களைப்பால் அவன் சற்றே அயர்ந்துவிட்டான். அந்த நேரத்தில் அவன் மாடுகள்
அருகிலிருந்த பசுமையான வரகுப் பயிர்களை மேய்ந்துவிட்டன. வயல்காரன் ஊர் முது
கோசர்களிடம் முறையிட்டான். ஊர் முது கோசர் அன்னி மிஞிலியின் தந்தையை நன்றாக
அடித்தனர். அத்துடன் விடாமல், மாடுகள் மேயப்
பார்த்துக்கொண்டிருந்தான் எனத் தீர்மானித்து, அவனது இரண்டு
கண்களையும் தோண்டிவிட்டனர். தந்தைக்கு
இழைத்த கொடுமையைத் தாங்கமுடியாமல் பழி தீர்க்க நினைத்த மகள், குறும்பியனிடம் முறையிட்டாள். குறும்பியன் தன் படைத்தலைவன் திதியனை
அனுப்பிக் கோசர் கொட்டத்தை அடக்கினான். அந்த நிகழ்வு அன்னி
மிஞிலிக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. அப்படிப்பட்ட பெருமகிழ்ச்சி இரவுக்குறியின்கண் தலைவியின் நலனை நுகர்ந்த தலைவனுக்கு இருந்ததாக தன் நெஞ்சிற்குச் சொல்லுகிறான்.
அகநானூறு - 04
திணை : முல்லை.
பாடியவர் : குறுங்குடி மருதனார்
விழுமியம் : மனிதநேயம்
கூற்று : தோழி தலைமகளைப் பருவம்காட்டி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: வினைவயில் பிரிந்த தலைவன், நான் கார்ப்பருவத் தொடக்கத்தில் மீண்டு
வருவேன். அதுவரை எனக்காக ஆற்றிருக்க எனக்
கூறிச்சென்றான். தலைவி தலைவனது பிரிவைத்
தாங்க முடியாமல் பெரிதும் வருந்தினாள். அது
கண்ட தோழி தலைவன் குறித்துச் சொன்ன கார்ப்பருவத்து வரவினைத் தலைவிக்கு எடுத்துக்காட்டி நம் தலைவன் இன்றே வருவான். நீ வருந்தாதே எனக்
கூறித் தலைவியை ஆறால் கூறுகிறாள்.
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய,
இரலை, தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, 5
கருவி வானம் கதழ் உறை சிதறி,
கார் செய்தன்றே,
கவின் பெறு கானம்.
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த 10
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா யாத்த மாண் வினைத் தேரன்,
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
15
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.
முல்லைக் கொடியில் கூரிய நுனியையுடைய அரும்புகள் தோன்ற, தேற்றாமரத்துடன்,
பசிய காம்புகளைக் கொண்ட கொன்றை மரங்கள் பூத்துக்
குலுங்குகின்றன. முருக்கியிருக்கும் இரும்பு போன்ற முருக்குக் கொம்புகளை உடைய
இரலைமான் துள்ளித்துள்ளி ஓடுகிறது. உலகம் புலம்புவதைக் கைவிட்டு மகிழ்ச்சியில்
திளைக்கிறது. இப்படியெல்லாம் நிகழும்படி மேகத் தொகுதி பெருமழை பொழிந்து காடெல்லாம்
கருமை நிறத்துடன் அழகு பெற்றுத் திகழ்கிறது.
தலைவன் தேரில் வருகிறான். குரங்கின் தலைமயிர்
போல நிமிர்ந்து வளைந்த பிடரி மயிருடன் கூடிய குதிரை பூட்டிய வண்டியில் வருகிறான்.
தேரில் கட்டியிருக்கும் மணியின் நாக்கு ஆடி மணியோசை எழுப்பாதபடி மணியின் நாக்கை இழுத்துக்
கட்டியிருக்கிறான். அரி அரியாகப் பூத்து உதிரும் நிலையில் இருக்கும் பொங்கர்ப்
பூவில் தன் துணையாடு இன்பமாகத் தேன் உண்ணும் வண்டுகள் தேர்மணியின் ஒலியைக்
கேட்டு அஞ்சி ஓடாமல் இருக்க அவ்வாறு அவன் மணிநாக்கைக் கட்டிவைத்திருக்கிறான். அவ்வாறு
வண்டினங்கள்கூடக் கலக்கமடைவதைப் பொறுக்காத உன் தலைவன், நீ
கலக்கமடைவதைப் பொறுப்பானோ?
மாட்டான். இதோ, விரைவில்
விரைந்து வந்துவிடுவான்.
தேர்ந்தெடுத்த வளையல் அணியக்கூடிய தலைவியே! அரிவை பருவத்தை உடைய தலைவியே!, எப்போதும் விழாக்கோலமாக விளங்கும்
உறையூருக்குக் கிழக்கில் உள்ள உயர்ந்த பெரிய குன்றத்தில் மலர்ந்திருக்கும் காந்தள்
பூப் போன்ற மணம் வீசக்கூடிய மேனியை உடைய தலைவியே வருந்தாதே.
அகநானூறு - 70
திணை : நெய்தல்
பாடியவர் : மதுரைத் தமிழ்க் கூத்தனார்
கடுவன் மள்ளனார்
விழுமியம் : தொன்மைச் சிறப்பு
கூற்று : தலைமகன் வரைவுக்கு (திருமணத்திற்கு) உடன்பட்டமையைத்
தோழி
தலைமகளுக்குச் சொல்லியது
கூற்று விளக்கம்: தலைவன்
தலைவியை மணந்து செல்லும் கருத்தின்றிக்
களவு ஒழுக்கமே காமுற்று ஒழுகினான்.
அலர் மிகுந்த காரணத்தினாலும் தோழி வரைவு கடாவியதாலும் வரைவு உடன்பட்டவனாய்த் தலைவியை மணந்து செல்ல வருகின்றமை அறிந்து தோழி
அவ்வின்னப் செய்தியைத் தலைவிக்குக் கூறி மகிழ்வித்தது.
கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே 5
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை, புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்
10
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
15
பல் வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தன்று,
இவ் அழுங்கல் ஊரே.
வளைந்த திமில் படகில் சென்ற பரதவருக்கு நல்ல வேட்டை
கிடைத்தது. அவர்களது சிறுகுடியில் மீன்-புலவு நாற்றும் பெரிதாக வீசிற்று. குறுகிய
கண்ணை உடைய தம் வலையின் பயனை அவர்கள் பெரிதும் பாராட்டினர். தமக்குக் கிடைத்த
அயிலை மீனை அவர்கள் தம் பாக்கத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் பகிர்ந்தளித்தனர். - இப்படிப்பட்ட மீன்துறையை உடையவன் தலைவன்.
அவன் நம்மோடு இருந்த உறவு பற்றி அலர் தூற்றும் வாயை உடைய ஊர்ப் பெண்டிர் கமுக்கமாகப்
பேசிக்கொள்கின்றனர். (அம்பல் தூற்றுகின்றனர்). இது முன்பு இருந்த நிலை.
இனி,
திருமணம் நடந்த பின்னர் என்ன செய்வார்கள்? வாய் அவிந்து (வாய் மூடி) போவார்கள். எப்படி வாய் அவிந்து
போவார்கள்?
தொன் முது கோடியில் (தனுஷ்கோடியில்) அதாவது
பாண்டியர்களுக்குரிய சேதுக்கரையில் அமர்ந்து ஸ்ரீராமன் இலங்கை மீது படையெடுப்பது
குறித்த போர் யூகங்களைத் தன் வானர சேனைகளுடன் ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்து
விவாதித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு ஒலி செய்து தொந்திரவு செய்த பறவைகளைத்
தம் கை ஒலி செய்து அமைதிப்படுத்தினான். அதைப் போன்ற ஆலமரத்தடியில் இருந்தவர்கள்
எல்லாரும் வாயவிந்து போனார்கள். அதுபோல அலர்
தூற்றும் மகளிரின் வாய் அவிந்து போகும்.