வெள்ளி, 29 அக்டோபர், 2021

அன்பின் ஐந்திணை


அன்பின் ஐந்திணை

(முதல், கரு, உரி)

 

தமிழிலக்கியத்திற்கு இலக்கணம் வகுக்கப்படும் பொழுது, ஒரு திணைக்கு உரியபொருள் அத்திணையின் உரிப்பொருள் எனக் காட்டப்படுகிறது. ஐந்து நிலங்களுக்குரிய ஒழுக்கங்களாகபுணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியவையும் அவற்றின் நிமித்தமும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணைகளின் உரிப்பொருள் எனப்படும்.

அன்பின் ஐந்திணை

ஒருவனும், ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்வது குறிஞ்சித் திணை என்று பெயர் பெறுகிறது. காதலன் பொருளீட்டுவதற்கோ, போர்க்களத்திற்கோ, கல்வி கற்பதற்கோ, தூதுவனாகவோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி காத்திருப்பது முல்லைத் திணை என்னும் பெயர் பெறுகிறது. தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிணக்குகள் வரலாம். இதனை ஊடல் என்று கூறுவர். இந்த ஊடலைக் குறிக்கும் திணை மருதத் திணை எனப்படும். கடலில் மீன் பிடிக்கச் சென்றோ, பிற காரணங்களாலோ தலைவன் பிரிந்து சென்று, திரும்பி வர இயலாத சூழலில் தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கி நிற்றலை நெய்தல் திணை என்பர்.

வியாழன், 28 அக்டோபர், 2021

எழுத்துகளின் பிறப்பு

 

எழுத்துகளின் பிறப்பு

 

தமிழ் எழுத்துகளின் வகைகள் பற்றியும் அதன் தொகை பற்றியெல்லாம் அறிந்துகொண்ட நாம், அடுத்து எழுத்துகள் எவ்வாறு எங்குப் பிறக்கின்றன என்பதையும் அறிந்துகொள்ளுதல் வேண்டியது அவசியமானதாகும். எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள்.

 

உயிர் தங்கியுள்ள உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய இடங்களில் தங்கி, உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன.

 

எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

புதன், 27 அக்டோபர், 2021

முனைவென்றியில் உள்ள பழைமையான சிவன் கோயில்

 

முனைவென்றியில் உள்ள பழைமையான சிவன் கோயில் இது. மதுரையை ஆண்ட பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம். ஆனால் எந்தப் பாண்டியர் காலம் என்று தெரியவில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாள்முதல் பூசை நடந்ததில்லை. சமிப காலமாக அந்த லிங்கத்திற்கு அருகில் உள்ள வயல்காரர் எப்பவாவது வெள்ளி, செவ்வாய் கிழமையில் பூ போட்டு சூடம் ஏத்தி சாமி கும்பிடுவார் என்கிறார் செ.அன்னதாஜ்.

ஆக கருங்கல்லால் லிங்கத்தின் பீடமும் லிங்கம் எட்டுப் பட்டையாகவும் இருப்பாதல் (லிங்கத்தைக் காணவில்லை) கோயில் கல்லால் ஆன கோயிலாக இருக்கலாம் என அவதானிக்க முடிகிறது. ஆனால் கோயில் போர்க் காரணமாக அழிக்கப் பட்டதா? அல்லது இயற்கையாகவே அழிந்து போனதா? எனத் தெரியவில்லை. கோயில் இருநததர்கான அடையாளமும் அழிக்கப்பட்டுள்ளது. 

லிங்கத்திற்கு அருகே ஒரு செம்பிரான் கல் ஒன்று மட்டும் கிடக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது கோயில் செம்பிரான் கல்லால் எழுப்பப்பட்டதாகவும் இருக்கலாம்.