சனி, 18 டிசம்பர், 2021

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் TAMIL SIRUKATHAIYIN THOTRAMUM VALARCHIYUM

 

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

TAMIL SIRUKATHAIYIN THOTRAMUM VALARCHIYUM

 

முனைவர் ந.இராஜேந்திரன்

தமிழ் - உதவிப்பேராசிரியர்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர் - 02

 

முன்னுரை

கதையும் கற்கனையும் மனித சமுதாளத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். மனிதன் காலம் காலமாக கதை சொல்லுவதையும் கதை கேட்பதையும் மரபாகக் கொண்டுள்ளனர். சிறுகதைகள் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பக் கூடியது.  இது எல்லா மக்களிடையேயுமுள்ள வாய்மொழி மரபாகும். நாகரீகம் வளர்ச்சி அடைவதற்கு முன்பு மக்கள் கூட்டம் கூட்டமாகவும் குழுவாகவும் அமர்ந்து கதை கூறி தமது பொழுதைக் கழித்தனர். தமிழர்கள் காலம் தோறும் பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். இராமாயணம் புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பரமார்த்த குரு கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், அபிநய கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றன அவற்றுள் சிலவாகும்.

இக்கதைகள் வாழ்வியல் ஒழுக்கங்கள், நீதி தவறாமை போன்ற பல ஒழுக்க நெறிகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் வலியுறுத்துகின்றன. இத்தகைய தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் காணலாம்.

புதன், 8 டிசம்பர், 2021

அழகிழந்த செருப்பு - கவிதை (கடங்காரக் கடவுள்) முனைவர் ந.இராஜேநந்தின்

 

அழகிழந்த செருப்பு - கவிதை (கடங்காரக் கடவுள்) முனைவர் ந.இராஜேநந்தின்

 

நெடுநாள் ஆசைப்பட்டு

ஆசை ஆசையாய் வாங்கிய செருப்பு

பலநாள் என் பாதத்தில்

படிந்திருக்க வேண்டுமென்ற வேட்கையில்

செருப்புத் தைப்பவரிடம் கேட்டேன்

கூலி என்னவென்று...

சோடிக்கு இருபது என்றார்

பதினைந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றேன்

 

ஒரு ஐந்துக்காக

காலணியைக் கலங்கப்படுத்தி

கண்களில்

கண்ணீரை வரவழைத்துவிட்டார்

 

ஒரு வாரம்தான் ஆனது

அந்தச் செருப்பு வாங்கி

அப்படியே

போட்டிருந்தால் கூட

ஆறு மாதம் உழைத்திருக்கும்

 

அவசரப்பட்டுத் தைத்ததில்

அறுபட்ட கழுத்தாய்

அழகிழந்து...

அனாதையாய்க் கிடந்தது

ஆசை ஆசையாய் வாங்கிய

அந்தச் செருப்பு .



செவ்வாய், 7 டிசம்பர், 2021

நட்பு

 

நட்பு

‘நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா’ என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். கூடா நட்பு கேடாய் முடியும் என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறார் என்றால் நாம் சிந்திக்க வேண்டும். ஆக வள்ளுவர் காலத்திலும் சரி கணினி யுகமாக விளங்கும் இக்காலத்திலும் சரி தீய செயல்கள் செய்யும் நண்பர்கள் நம்நருகில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொரானநோய்க்கு உட்பட்டவர் என்றெண்ணி தள்ளி இருப்பது நல்லது.

தீ நட்பு பெருகலின் குன்றல் இனிது

துரியோதனன் கரவாக உறவுகூறித் தன் அரண்மனைக்கு வந்துபோகும்படி தருமனை அழைத்த பொழுது அத்தீயவனோடு நட்புகொள்ளுதலினும் கொள்ளாமையிருப்பது நல்லதென்று வீமன் கொதித்துக் கூறியுள்ளது ஈண்டுக் நோக்கத்தக்கது.