தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
TAMIL SIRUKATHAIYIN THOTRAMUM
VALARCHIYUM
முனைவர் ந.இராஜேந்திரன்
தமிழ் - உதவிப்பேராசிரியர்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 02
முன்னுரை
கதையும்
கற்கனையும் மனித சமுதாளத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். மனிதன் காலம் காலமாக கதை
சொல்லுவதையும் கதை கேட்பதையும் மரபாகக் கொண்டுள்ளனர். சிறுகதைகள் என்பது சிறுவர்கள்
முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பக் கூடியது. இது எல்லா மக்களிடையேயுமுள்ள வாய்மொழி மரபாகும்.
நாகரீகம் வளர்ச்சி அடைவதற்கு முன்பு மக்கள் கூட்டம் கூட்டமாகவும் குழுவாகவும் அமர்ந்து
கதை கூறி தமது பொழுதைக் கழித்தனர். தமிழர்கள் காலம் தோறும் பல்வேறு கதைகளைக் கேட்டு
வருகின்றனர். இராமாயணம் புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பரமார்த்த குரு கதைகள்,
பஞ்சதந்திரக் கதைகள், அபிநய கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றன அவற்றுள் சிலவாகும்.
இக்கதைகள் வாழ்வியல் ஒழுக்கங்கள், நீதி தவறாமை போன்ற பல ஒழுக்க நெறிகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் வலியுறுத்துகின்றன. இத்தகைய தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் காணலாம்.