History லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
History லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஆகஸ்ட், 2021

இலக்கியத்தின் சுவைக்கு வலிமை சேர்க்க வரலாறு பதிவு செய்யப்படுகிறது

 

முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


கூடுதல் வலிமைக்காக

      வாய்மொழி இலக்கியமாகத் தொன்றுதொட்டு வழங்கிவந்த பாடல்கள் பின்பு வரிவடிவம் பெற்றுச் சங்க இலக்கியமாக உருமாறின. இச்சங்க இலக்கியங்களில் அகத்திணையாயினும் புறத்திணையாயினும் பெரும்பான்மை வரலாற்று நிகழ்வு இடம்பெறாத பாடல்கள் இல்லை. அந்த அளவிற்கு வரலாறு குறித்த புரிதல்கள் சங்கப் புலவர்களிடம் இருந்திருக்கின்றது. இத்தகைய வரலாற்றுப் புரிதல்கள்தான் சங்ககால மக்களின் சிறப்புகளை உலகறியப் பறைசாற்றின.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

தமிழ்ச் சமூக வரலாற்றில் கொடுமணல் : நினைவிடம்

தமிழ்ச் சமூக வரலாற்றில் கொடுமணல் : நினைவிடம்

கொடுமணல் தமிழர் வரலாற்றை மீள்கட்டமைப்புச் செய்ய மிக முக்கியமான இடம். தமிகத்தில் 150 க்கும் மேல்  அகழாய்வுகள் நடத்தப்பெற்றுள்ளன. ஆனால்,  கொடுமணலில் நடத்தப்பெற்ற அகழாய்வில்தான் அதிகமான குறியீடகள்   கண்டெடுக்கப்பெற்றன. அதற்குப் பிறகுதான் ஆய்வாளர்களின் கவனம் குறியீடுகள் பக்கம் திரும்பியது என்றால் அது மிகையாகாது.