பழமொழி
நானூறு
முன்றுறை
அரையனார்
பழமொழி
நானூறு சங்கம் மருவிய காலத்தைச்
சேர்ந்தப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப்
பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால்
அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.
இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி
கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. 4ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இந்நூலில் 34
தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. வரலாற்றுக் குறிப்புகளும்
புராணக் குறிப்புகளும் இடம் பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும்.
விழுமியம் - வாழ்வியல் அறம்
