ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

சமூதாயம் - கடங்காரக் கடவுள், கவிதை (kavithai )

 

உன்னுடைய மாட்டுக்கு

மூக்கணாங்கயிறு பூரூவதும்

கொட்டுக்கால் அடிப்பதும்

இழுத்துக் கட்டுவதும்

என் வேலையில்லை.


அடங்காத மாட்டை

ஏர்க்காலில் பூட்டுவதும்

வண்டி இழுக்கப் பழக்குவதும்

பழகாத மாட்டுக்குத்

தார்க்குச்சி எடுப்பதும்

என் வேலையில்லை


மாட்டைப் பழக்குவதையே

முழுநேர வேலையாகச் செய்யும்

ஒரு கூட்டம் உண்டு என்பதற்காக

நானும் அப்படியே இருக்க வேண்டுமென

நீ

நினைப்பது அபத்தம்.









1 கருத்து:

Thank you for Reading