எவ்வளவு
வலியும் வேதனையும் இருந்திருக்கும்
இந்த வார்த்தையை உதிர்க்க
அப்படி
என்ன கேட்டுவிட்டார் என்னிடம்?
உன்னைப் பார்த்து ரெம்ப நாளாச்சு
சோட்டைக்கு ஒரு நாள்
வந்து தங்கிட்டுப் போடா - என்றார்
என் மகனுக்கு
உடல்நிலை சரியில்லை
அடுத்த மாதம் வரட்மா - என்றேன்
இப்படித் தானே
நானும் உன்னை வளர்த்தேன்
என்றதோடு அணைந்துவிட்டது கைபேசி
- இளையவன் தமிழ் ( ந.இராஜேந்திரன்)
சிறப்பு
பதிலளிநீக்கு