ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

அப்பா கவிதை (சோட்டைக்கு ஒரு நாள்) Appa Kavitha

 

எவ்வளவு

வலியும் வேதனையும் இருந்திருக்கும்

இந்த வார்த்தையை  உதிர்க்க


அப்படி 

என்ன கேட்டுவிட்டார் என்னிடம்?

உன்னைப் பார்த்து ரெம்ப நாளாச்சு

சோட்டைக்கு ஒரு நாள்

வந்து தங்கிட்டுப் போடா - என்றார்


என் மகனுக்கு

உடல்நிலை சரியில்லை

அடுத்த மாதம் வரட்மா - என்றேன்


இப்படித் தானே

நானும் உன்னை வளர்த்தேன்

என்றதோடு  அணைந்துவிட்டது கைபேசி

                                               - இளையவன் தமிழ் ( ந.இராஜேந்திரன்)



1 கருத்து:

Thank you for Reading