அகப்பாடல்களில் வரலாற்றுப்
பதிவுகள்
முனைவர்
ந.இராஜேந்திரன்
மொழித்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)
கோயம்புத்தூர்
- 28.
சங்க இலக்கிய
அகத்திணைக் கூறுகளில் வரலாற்று நிகழ்வு பற்றிய பதிவுகள் நேரடியாக மட்டுமல்லாது பல இடங்களில்
உவமையாகவும், உள்ளுறையாகவும் பதிவுசெய்யப் பெற்றிருக்கின்றன. இப்பதிவுகள் செவிலிக்
கூற்றாகவோ, தோழி கூற்றாகவோ தலைவி கூற்றாகவோ
இருக்கலாம். இக்கூற்றுகளின் வாயிலாகத் தான் பார்த்த அல்லது கேட்ட வரலாற்று நிகழ்வுகளைப்
பலரும் அறியும் வண்ணம் புலவர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.
அகமாந்தர்கள்
தங்கள் அக உணர்வுகளை வெளிப்படுத்தும் நிலையிலும் தான் சார்ந்த அல்லது தன்னைச் சார்ந்த
உறவுகளின் மனநிலையை, செயல் நிலையை வெளிப்படுத்தும் நிலையிலும் புறநிகழ்வுகளை அதாவது
வரலாற்றுச் செய்திகளை ஒப்பீட்டு நோக்கில் பதிவுசெய்துள்ள திறத்தினை அறிய முடிகின்றது.
சிறப்பு
பதிலளிநீக்குதொடருங்கள்
நன்றி ஐயா
நீக்கு