புறப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்
முனைவர்
ந.இராஜேந்திரன்
மொழித்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)
கோயம்புத்தூர்
- 28.
சங்க
இலக்கியப்
புறப்பாடல் முறைமையில் உள்ள சுவை அல்லது அதனுடைய வீர அம்சங்கள் வரலாற்றைப் பதிவுசெய்யும்
கவித்துவம் என்ற நிலையில் முக்கியத்துவமானதாக நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.
புற இலக்கியத்தில் ஆட்சியாளர்களுக்குப் புலவர்கள் சில கருத்துக்களை அறிவுறுத்திக் கூறுகின்ற
பண்புகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியப் புறத்திணைக் கூறுகளில் வரலாற்றுப் பதிவுகள்
நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இடங்களில் உவமையாகவும் உள்ளுறையாகவும் பதிவுசெய்யப்
பெற்றுள்ளன. இப்பதிவுகள் அரசர்களைப் புகழ்வதும், புகழ்கின்ற அரசனிடம் உதவி கேட்பதும்,
தங்களுடைய சுக துக்கங்களை வெளிப்படுத்திக் கொள்வதும் புறத்தினுடைய நுண்ணிய அம்சங்களாகும்.
ஏனென்றால் அது வரலாற்று இருப்பைச் சார்ந்தது. இவ்வரலாற்று இருப்பைப் பிற மன்னர் வரலாற்றோடு
ஒப்புமைப்படுத்தி முன்னைய வரலாற்று நிகழ்வினை நினைவுகூறும் வண்ணம் புற இலக்கியங்கள்
கட்டமைக்கப் பெற்றுள்ளன.
சிறப்பு தொடர்ந்து எழுதுக வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு