ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

பயன்பாட்டு இலக்கணம் - மரபுப் பிழைகளை நீக்குதல்

 


மரபுப் பிழைகளை நீக்குதல்

 

நமது முன்னோர்கள் (உயர்ந்தோர்) எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி எவ்வாறு குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி இன்றும் வழங்குதல் மரபு என அழைக்கப்படுகிறது. இதனை,

எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே (நன். நூற். எண் : 387)

என்கிறது நன்னூல்.

 

பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியே மரபு என்கிறது தமிழ் அகராதி.

இத்தகைய மரபுச் சொற்களை இன்று மக்கள் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் பிழையாகப் பயன்படுத்துகின்றனர். இப்பிழையைக் கண்டறிந்து ரபுப் பிழைகளை நீக்கி, சரியாகப் பேசவும் எழுதவும் இப்பகுதி துணைநிற்கும்.

இளமைப் பெயர்கள்

1.பார்ப்பு, 2.பறழ், 3.குட்டி, 4.குருளை, 5.கன்று, 6.பிள்ளை 7.மகவு, 8.மறி, 9.குழவி எனத் தமிழில் ஒன்பது வகையான இளமைப் பெயர்கள் உள்ளன என்பார் தொல்காப்பியர். இதனை,

 

மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று

ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே” (தொல்காப்பியம், மரபியல், பாடல்-1)

 

    என்ற நூற்பா வழி அறியமுடிகிறது.

    விலங்குகளின் இளமைப் பெயர்கள்

அணிற் பிள்ளை.

ஆட்டுக் குட்டி

எலிக் குஞ்சு, எலிக் குட்டி

எருமைக் கன்று.

ஒட்டகக் கன்று

ஓநாய்க் குட்டி

கழுதைக் குட்டி.

கரடிக் குட்டி

கீரிப் பிள்ளை.

குதிரைக் குட்டி

குரங்குக் குட்டி, குரங்குப் பறழ்

சிங்கக் குருளை

சிறுத்தைக் குட்டி

நரிக் குருளை, நரிப் பறழ்

நாய்க் குட்டி. நாய்ப் பறழ்

தவளைக் குஞ்சு

பன்றிக் குட்டி

பசுங் கன்று.

புலிக் குட்டி, புலிப் பறழ்

பூனைக் குட்டி.

மான் கன்று

முயல் குருளை

யானைக் கன்று.

வெருகுப் பறழ்

    பறவைகளின் இளமைப் பெயர்கள்

அன்னம் பார்ப்பு

கழுகுப் பார்ப்பு

காக்கைக் குஞ்சு

கிளிப் பிள்ளை

குயில் குஞ்சு

குருவிக் குஞ்சு

கோழிக் குஞ்சு

வாத்துக் குஞ்சு

பருந்துப் பார்ப்பு

புறாக் குஞ்சு

மயில் குஞ்சு

மைனாக் குஞ்சு     

    விலங்குகள் ஒலிக் குறிப்புச் சொற்கள்

அணில் கீச்சிடும்,

எலிக் கீச்சிடும்

எருது எக்காளமிடும்

கழுதைக் கத்தும்,

குதிரைக் கனைக்கும்,

குரங்கு அலம்பும்

சிங்கம் கர்சிக்கும்

தவளைக் கத்தும்

நரி ஊளையிடும்,

நாய்க் குரைக்கும்

பசு கதறும்

பல்லி சொல்லும்

புலி உறுமும்,

பன்றி உறுமும்

யானைப் பிளிறும்

 `    பறவைகள் ஒலிக் குறிப்புச் சொற்கள்

ஆந்தை அலறும்

காகம் கரையும்

கிளிப் பேசும்

குயில் கூவும்

குருவிக் கீச்சிடும்

கோழிக் கொக்கரிக்கும்

சேவல் கூவும் 

புறாக் குனுகும்

மயில் அகவும்

வண்டு முரலும்  

வாத்துக் கத்தும்

வானம்பாடி பாடும்

     விலங்குகள், பறவைகள் தங்குமிடம்

குதிரைக் கொட்டில்,

புலிக் குகை

மாட்டுத் தொழுவம்,

எலிப் பொந்து

வாத்துப் பண்ணை,

எறும்புப் புற்று

கரையான் புற்று

ஈசல் புற்று

காக்கைக் கூடு

கிளிப் பொந்து

குருவிக் கூடு

குளவிக் கூடு

கோழிக் கூடு

பாம்புப் புற்று

    செடி, கொடி மரங்களின் தொகுப்பு

எலுமிச்சைத் தோட்டம்

கருவேலமரக் காடு

கீரைத் தோட்டம்

பயிற் கொல்லை

மிளகாய்த் தோட்டம்

பருத்திக் கொல்லை

பூந் தோட்டம்                    

மாந் தோப்பு                 

வாழைத் தோட்டம்

தேயிலைத் தோட்டம்  

சோளக் கொல்லை  

சவுக்குத் தோப்பு

தென்னந் தோப்பு             

பனங்காடு                   

    தொகுப்புப் பெயர்கள்

ஆட்டு மந்தை

எறும்பு சாரை

கற் குவியல்

சாவிக் கொத்து

திராட்சைக் குலை

பசு நிரை

மாட்டு மந்தை

யானைக் கூட்டம்

விறகுக் கட்டு

வீரர் படை

வைக்கோல் போர்

     தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்

கருவேப்பிள்ளை

மல்லித்தழை

சோளத்தட்டு     

முருங்கைக்கீரை

தாழைமடல்       

தென்னங்கீற்று

வாழையிலை    

பனையோலை

புகையிலை

வேப்பந்தழை     

மாவிலை

மூங்கில் இலை

நெற்பயிர்

 

 

 

 


திங்கள், 28 ஜூலை, 2025

கவிஞர் யா.சாம்ராஜ்

 

கவிஞர் யா.சாம்ராஜ் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காட்டு நெடுங்குளம் எனும் கிராமத்தில் திரு.ரா.யாகப்பன் திருமதி.யா.மரியசெல்வம் இணையருக்கு 21.06.1984 ஆம் ஆண்டு முதல் மகனாகப் பிறந்தார். சிவகங்கை - புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பையும் (அக்டோபர் 2000), சிவகங்கை - மன்னர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பையும் (மார்ச் - 2003), காரைக்குடி - அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் பட்டப்படிப்பையும் (B.A, ஏப்ரல் - 2008), காரைக்குடி - அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பட்டமேற்படிப்பையும் (M.A, ஏப்ரல் - 2008), காரைக்குடி - அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் (M.Phil, செப்டம்பர் - 2009), அறந்தாங்கி - வெஸ்ட்லி கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் பட்டத்தையும் (B.Ed, மே - 2010), திருநெல்வேலி - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் (Ph.D, 2017) பெற்றவர். இவர் கவிஞர், பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், இசைக்கலைஞர்,  திரைப்படப் பாடலாசிரியர், இயக்குநர் எனப் பன்முக ஆளுமை பெற்றவர். தற்பொழுது திருப்பத்தூர் - ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வருகிறார். Contact : 99650 66260 - Email : ysamraj2106@gmail.com


பன்னாட்டு ஆய்விதழ் :

·         கவிஞர் மீராவின் வாழ்வும் பணியும், 192, பெல்ஸ் சாலை, சேப்பாக்கம், சென்னை. டுடேஇதழ், பன்னாட்டு ஆய்விதழ், டிசம்பர் -2015, ISSN: 2349-1914.

·         கவிஞர் மீராவின் பன்முகப் பார்வை,192 பெல்ஸ் சாலை,சேப்பாக்கம், சென்னை.டுடே இதழ் பன்னாட்டு ஆய்விதழ்,டிசம்பர் 2015, ISSN: 2349 - 1914.

·         கவியரசர் கண்ணதாசனின் அனுபவமும் எழுத்தும்,நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி, கோவிலூர், காரைக்குடி. Shanlax International Journal of Arts, Science and Humanities, March 2021, P- ISSN: 2321 - 788X.

·         வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்,ஸ்ரீ  சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை Shanlax International Journal of Arts, Science  and Humanities, March 2021, P- ISSN: 2321 - 788X.

·         கிறிஸ்தவம் (புதிய ஏற்பாடு) காட்டும் மனிதநேயம்,நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி,கோவிலூர், காரைக்குடி. Shanlax International Journal of Arts, Science  and Humanities, March 2021, P- ISSN: 2321 - 788X.

·         கவிஞர் மீராவின் கவிதைகளில் சமுதாயம்,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை Shanlax International Journal of Arts, Science  and Humanities, March 2021, P- ISSN: 2321 - 788X.

·         மனித விடுதலைக்கு வித்திட்ட பெரியாரும் பெரியோரும், சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி, ஈரோடு. சர்வதேச தமிழ் ஆய்விதழ் DOI : 10.34256/irjt22s55,May 2022, (UGC Care Listed Journal).

·         மானுடவியல் நோக்கில் தங்கர்பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஆனந்தா கலை அறிவியல் கல்லூரி,தேவகோட்டை,சர்வதேச தமிழ் ஆய்விதழ். DOI : 10.34256/irjt22s55, May 2022, (UGC Care Listed Journal).

·         தங்கர்பச்சானின் வாழ்வும் பணியும், புதுப்புனல் ஆய்விதழ்,சென்னை. புதுப்புனல் ஆய்விதழ், ISSN 2278 1641 - September 2023, (UGC Care Listed Journal).

·         அறிஞர் அண்ணாவின் குமாஸ்தா பெண் நாவலில் வறுமையும், காதலும், அரசு கலைக் கல்லூரி, மேலூர். BODHI, International Journal of Research in Humanities, Arts and Science, E-ISSN : 2456-5571- October 2024.

·         வைரமுத்துவின் திருத்தி எழுதிய தீர்ப்புகள், சீர்மிகு வளர் தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல். புலம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், ISSN : 2583-0139 - January 2025.


ஆய்வுக் கட்டுரைகள் :

Ø  முனைவர் இரா.பாலசுப்பிரமணியன் பாண்டியநாயகன் புதினம் உணர்த்தும் உத்திகள், தமிழ் சக்தி ஆய்வு மன்றம், காரைக்குடி. ஜூன் 2010, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.

Ø  வரலாற்றுப் பார்வையில் காட்டுநெடுங்குளம், தமிழ் சக்தி ஆய்வு மன்றம், காரைக்குடி. செப்டம்பர் 2011, ISBN No. 978-81-920060-0-0, தேசியக் கல்லூரி (தன்னாட்சி), திருச்சி.

Ø  சிலம்பில் கண்ணகியின் கண்கள், தமிழ் சக்தி ஆய்வு  மன்றம், காரைக்குடி. செப்டம்பர் 2011,ISBN No. 978-81-920060-0-0, யாதவர் கல்லூரி, மதுரை.

Ø  கவிஞர் மீராவும் திராவிட பொதுவுடைமைக் கொள்கைகளும், இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மே 2012, ISBN No. 978-93-80342-57-3, காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

Ø  மீராவின் ஊசிகள் கவிதைத் தொகுப்பில் தலைப்பு நிலை உத்திகள், அனைத்திந்திய  ஆராய்ச்சிக் கழகம், டிசம்பர் 2012, ISBN No. 978-81-922802-3-3, கற்பகம் பல்கலைக்கழகம், கோவை.

Ø  கவிஞர் மீராவின் கவிதைகளில் மனிதனாகும் முறை,TEM’2018, December 2018, ISBN No. 978-0-359-26035-5, KSR கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, திருச்செங்கோடு.

Ø  ம.ஸ்டீபன் மிக்கேல்ராஜ் சிறுகதையில் திருவிவிலியமும் திருக்குறளும், தமிழ்ப் பண்பாட்டு மையம், காரைக்குடி. டிசம்பர் 2018, ISBN No. 978-0-359-26679-1, தமிழ்ப் பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

Ø  வரலாற்று நோக்கில் காட்டுநெடுங்குளம் புனித செபஸ்தியார் திருத்தலம், அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்த்துறை, ரூசா (RUSA Phase 2.0) காரைக்குடி. அக்டோபர் 2019, ISBN No. 978-81-934510-1-4, அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்த்துறை, காரைக்குடி.

Ø  திருக்குறளில் மனிதனாகும் முறை, தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை, பிப்ரவரி 2020, ISBN No. 978-81-909877-2-1, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.

Ø  கவிதை இலக்கியத்தில் குழந்தைகள், அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்ப் பண்பாட்டு மையம், ஜுலை 2021, ISBN No. 978-81-953066-9-5, அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்ப் பண்பாட்டு மையம், காரைக்குடி,

Ø  உளவியல் நோக்கில் கவிஞர் மீராவின் படைப்பாளுமை, ‘ஆர்அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், சென்னை - 29, டிசம்பர் 2023, , ISBN No. 978-93-85349-60-7, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

Ø  நாட்டுப்புறப் பாடல்களில் கிடாக்குழி மாரியம்மாளின் தனித்துவம், 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மலேசியா - 2023.

Ø  நெய்தல் இலக்கியத்தில் கவிஞர் அறிவுமதியின் ‘வலி’ தந்த வலி. ஏ.டி.எம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம் - 2024.    

                                        

விருதுகள்:

                      கவிஞர் யா.சாம்ராஜ் அவர்கள் பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

v  சிறப்புப் பரிசு, பிரான்ஸ் தமிழ்ச் சங்கம், பிரான்ஸ்.

v  விவேகானந்தர் விருது, மதுரை நேரு யுகேந்திரா.

v  இளம் கவிஞர் விருது, மயிலம் சோமந்துரை தமிழ்மணி அறக்கட்டளை.

v  கவிவளர்மணி விருது, திருச்சி ஜெயம் கலைத் தொடர்பு மையம்.

v  உலக மகா சாதனையாளர் விருது - கோவை தமிழ்ச் சங்கம், கோயம்புத்தூர்.

v  இலக்கியச் சாரல் விருது - நேஷனல் சமுதாயக் கல்லூரி, திருப்புத்தூர்.

v  இலக்கிய நிலா விருது - மன்னர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை.

v  இளம் எழுத்தாளர் விருது - காரைக்குடி தமிழ் இசைச் சங்கம்.

v  சிறந்த எழுத்தாளர் விருது - திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா நூலகம்.

v  கவியரசர் கண்ணதாசன் விருது - திருப்புத்தூர் கவியரசர் கண்ணதாசன் பெருமன்றம்.

v  மக்களிசைக் கவிஞர் விருது - தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை.

v  தமிழ்ச் சுடர் விருது - தமிழ் சக்தி ஆய்வு மன்றம், காரைக்குடி    

v  இலட்சிய ஆசிரியர் விருது - தினமலர் நாளிதழ், மதுரை.

v  விஞ்ஞானி ரகுபதி விருது - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றம் தமுஎகச, காரைக்குடி.

v  புதுக்கவிச்சுடர் விருது - ஈரோடு தமிழ்ச் சங்கம், ஈரோடு.

v  நா.முத்துக்குமரன் விருது - தமிழ்க் கலை இலக்கிய அறக்கட்டளை, சென்னை.

v  அன்னம் விருது - இலக்கிய வீதி, சென்னை.

v  சாதனைத் தமிழன் 2020 விருது - தமிழ்க்கலை இலக்கிய அறக்கட்டளை, கரூர்.

v  இலக்கியச் சிற்பி விருது - ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி, தேவகோட்டை.

v  கவிச் சிற்பி காந்தி விருது 2020 - தாய் உள்ளம் அறக்கட்டளை, ஓசூர்.

v  ஆய்வுலகச் சிகரம் விருது - சிவகாசி முத்தமிழ்ப் பதிப்பகம்.

v  குறள் ஆய்வுச் செம்மல் விருது - தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.

v  வள்ளுவர் கலைமணி விருது - 2021, நிறைக்கோல் தமிழ்ப்பேரவை, சேலம்.

v  கலாம் விங்ஸ் அவார்ட் - 2021, ரீச் மீடியா & JCI ஓசூர் சிப்காட், ஓசூர்.

v  காவிய நாயகன் விருது - 2021, பசுமை வாசல் பவுண்டேஷன் & மனிதநேய மக்கள் அறக்கட்டளை, திண்டுக்கல்.

v  நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை விருது - 2021, பசுமை வாசல் பவுண்டேஷன் & தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம், சென்னை.

v  கல்விச் சுடர் விருது - 2021, சிவகங்கை மாவட்டக் கவனகக்கலை மன்றம், காரைக்குடி.

v  அமரர் எழுத்தாளர் சந்திரகாந்தன் விருது - 2021, திருப்புத்தூர் எழுத்தாளர் கூட்டமைப்பு, பாரதி இலக்கியக் கழகம், திருப்புத்தூர்.

v  அசோகமித்திரன் படைப்பூக்க விருது - 2021, தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை, தேனி.

v  அசோகமித்திரன் படைப்பூக்க விருது - 2022, தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை, தேனி.

v  கவிநாயகன் விருது - 2022, தமிழ் அமுது அறக்கட்டளை.

v  தேசபக்தன் விருது - 2022, சங்க இலக்கிய ஆய்வு நடுவம், பெரம்பலூர்.

v  மகாகவி பாரதி நினைவு விருது - 2022, பாரதி இசை கல்விக் கழகம், சிவகங்கை.

v  திருப்பத்தூர் வாசக வட்ட பாராட்டு விருது - 2022, தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணா கிளைப் பொது நூலகம், திருப்பத்தூர்.

v  வெற்றித் தமிழன் விருது - 2023, இனிய நந்தவனம் பவுண்டேசன், திருச்சி.

v  பனுவல் கலை இலக்கிய விருது - 2023, களரி கலை இலக்கியக் களம், பாண்டிச்சேரி.

v  தங்கத் தமிழர் விருது - 2024, தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை, சேலம். 

v  தமிழ் மாமணி விருது - 2024, இனிய நந்தவனம் பவுண்டேசன், திருச்சி.

v  அசோகமித்திரன் படைப்பூக்க விருது - 2024, தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை, தேனி.


https://drnrajendran.blogspot.com/


https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/


https://drnrajendran.blogspot.com/


https://drnrajendran.blogspot.com/



https://drnrajendran.blogspot.com/

 

ஆய்வேடுகள்

§  எம்., முதுகலைத் தமிழ் - நந்தனம் கல்லூரிப் பேராசிரியர் கவிஞர் இரா.கருணாநிதியின் சூரியச் சும்மாடு கவிதைத் தொகுப்பு ஓர் ஆய்வு.

§  எம்.ஃபில், ஆய்வியல் நிறைஞர் -  தங்கர்பச்சான் திரைப்படங்களில் உறவுகளும் உணர்வுகளும்.

§  பிஎச்.டி, முனைவர் - கவிஞர் மீராவின் இலக்கியப் பங்களிப்பு.

 

நூல்கள்

      2025 : விழிகளால் பேசு டிஸ்கவரி புக் பேலஸ்சென்னை - 78.

      2025 : கல்வியாய் வந்த கடவுள் - கவிதா வெளியீடு, சென்னை - 17

2.   2023 : மகனுக்கு அப்பா என்றும் பெயர் படி வெளியீடுசென்னை - 78.

3.   2022 : ஆய்வியல் நோக்கில் சொற்கோ இராகருணாநிதியின் ‘சூரியச் சும்மாடு’ -              ஆய்வு நூல் - தமிழ் நாற்றங்கால் பதிப்பகம், இட்டிசேரி, சிவகங்கை.

4.   2021 : அம்மாச்சி டிஸ்கவரி புக் பேலஸ்,சென்னை-78

5.   2020 : மீரா கவிதைகள் (தொகுப்பாசிரியர்) - சீதை பதிப்பகம்சென்னை - 05.

6.   2020 : மீரா கட்டுரைகள் (தொகுப்பாசிரியர்) - சீதை பதிப்பகம்சென்னை - 05.

7.   2017 : தலைப்புச் செய்தி சீதை பதிப்பகம்சென்னை - 05.

1.   


https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

கவியரங்கப் பங்கேற்பு

1.   மதுரை வானொலியில் இலக்கிய மலர் பகுதியில் கவிதை வழங்கி சிறப்பித்தது - நாள் : 02.06.2023

2.   மதுரை வானொலியில் இலக்கிய மலர் பகுதியில் 'வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்' என்றத் தலைப்பில் உரை நிகழ்த்தியது - நாள் : 21.07.2022.

3.   மதுரை வானொலி நிலையம், படைப்பரங்க நிகழ்ச்சியில் கவிதை வழங்கி சிறப்பித்தது - நாள் : 08.02.2021.

4.   'பொதிகை' தொலைக்காட்சியில் கவிஞர் இரா.கருணாநிதி தலைமையில் 'கணப் பொழுதில் கவிதை வரும்' நிகழ்ச்சியில் கவிதை வழங்கிச் சிறப்பித்தது - நாள் : 13.12.2007.


தனித்திறமைகள்

             I.     "தண்ணீரும் மக்களும்" என்ற குறும்படம் திருப்பூர் 'நிழல்' பத்திரிகை நடத்திய மாநில அளவிலான குறும்படப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றதற்கான சான்றிதழ் - ஆண்டு : 2008.


          II.    எனது நெறியாளுகையின் கீழ் உருவான மாணவப் படைப்புகள்

1.  வேர் விட்ட வினைகள்(கவிதை) - வேர்களைத் தேடி பதிப்பகம் - ஆசிரியர் : மாணவி இரா.ரேணுகாதேவி, பி.., ஆங்கிலம்.



2.  எங்கே மனிதம்? (கட்டுரை) - தமிழ் நாற்றங்கால் பதிப்பகம் - ஆசிரியர் : மாணவி ஜெ.சஹானா பாரதி, பி.எஸ்சி (இயற்பியல்).


https://drnrajendran.blogspot.com/

3.  வான் எழுதும் முதல் மழை (கவிதை) - தமிழ் நாற்றங்கால் பதிப்பகம் - ஆசிரியர் : மாணவி மு.ரிஸ்வானா பர்வீன், பி.எஸ்சி (இயற்பியல்).



4.  சருகுகள் தயாராக (கவிதை) - தமிழ் நாற்றங்கால் பதிப்பகம் - ஆசிரியர் : மாணவன் வசந்தகுமார் கலைச்செல்வன், பி.எஸ்சி (இயற்பியல்).



5.  என் பார்வையில் திருநங்கைகள் (கட்டுரை)- தமிழ் நாற்றங்கால் பதிப்பகம் - ஆசிரியர் : மாணவி செ.கோகிலாராணி,பி.எஸ்சி (கணிதம்)


6.  வரிகள் எங்கும் வண்ணத்துப்பூச்சிகள் (கவிதை) - தமிழ் நாற்றங்கால் பதிப்பகம் - ஆசிரியர் : மாணவி ம.அபிநயா, பி. (ஆங்கிலம்)


திரைப்படப் பாடலாசிரியர்

https://drnrajendran.blogspot.com/

https://drnrajendran.blogspot.com/

youtube

https://www.youtube.com/watch?v=-jxGOQPfL6Q&list=RD-jxGOQPfL6Q&start_radio=1

https://www.youtube.com/watch?v=WIGV2hZ940w&list=RDWIGV2hZ940w&start_radio=1
 
https://www.youtube.com/watch?v=3L1AgZaXRAU

https://www.youtube.com/watch?v=FBFrdaQM8E8

https://www.youtube.com/watch?v=TV420iDP-oA

https://www.youtube.com/watch?v=jCe32Jbt0OE&list=RDjCe32Jbt0OE&start_radio=1

https://www.youtube.com/watch?v=p6S6mykhUq4