முதுமொழிக்காஞ்சி
மதுரைக் கூடலூர் கிழார்
மதுரைக் கூடலூர் கிழார் என்னும் புலவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப்பொருள்படும். நிலையாமை கருத்துகளை உணர்த்தி உலகியல் அனுபவத்தை எடுத்துரைப்பதால் இப்பெயர் பெற்றது. இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர். பத்துப் பாடல்களைக் கொண்ட பதிக அமைப்பைக் கொண்டது. இந்நூல் 100 பாடல்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் அடியோடு தொடங்குகிறது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடுக்கி வருகின்றன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறியது நூல் இது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஒற்றை அடியால் உலக நீதிகளை எடுத்துரைக்கும் சிறப்பான நூல்.
மதுரைக்
கூடலூர் கிழார்
கூடலூர் இவர் பிறந்த ஊராகவும், மதுரை பின்னர் வாழ்ந்த ஊராகவும் இருத்தல் வேண்டும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். கூடலூர்க் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்க நூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 4 உள்ளன. அவை குறுந்தொகை 166, 167, 214, புறநானூறு 229 ஆகியவையாகும்.
முதுமொழிக்காஞ்சியில் இடம்பெற்றுள்ள பத்துப் பெயர்கள் பின்வருமாறு: