சனி, 20 ஜனவரி, 2024

இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்

 


இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார்



 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானது இனியவை நாற்பது. இன்னா நாற்பதை அடுத்துத் தோன்றிய நூல் இனியவை நாற்பது. வாழ்க்கைக்கு வேண்டிய இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறுகிறது. ஆதலால் இந்நூலிற்கு இனியவை நாற்பது என்ற பெயர் வந்தது. இனியது நாற்பது, இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களும் இந்நூலுக்கு உண்டு. இந்த நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 பாடல்களைக் கொண்டுள்ளது. எட்டாவது பாடல் மட்டும் பஃறொடை வெண்பாவால் ஆனது. ஏனைய பாடல்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாவில் அமைந்துள்ளன.

பூதஞ்சேந்தனார்

இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். ஆசிரியர் பெயர் சேந்தன். பூதன் என்பது இவர் தந்தையாரின் இயற்பெயர். இவர் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால் மதுரைத் தமிழாசிரியர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

பூதஞ்சேந்தனார் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் சிவபெருமானையும், அடுத்துத் திருமாலையும், பின்னர் பிரம்மனையும் குறிப்பிடுகின்றார். மும்மூர்த்திகளையும் பற்றிக் குறிப்பிடுவதால் இவர் வைதிக சமயத்தினராதல் வேண்டும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

நூல் அமைப்பும் பாடுபொருளும்

தனி மனிதனுக்கு இனியது இன்னின்ன என்பது இந்நூலில் கூறப்படுகிறது. இல்லறத்திற்கு இனியவை, துறவறத்திற்கு இனியவை இவையென்று எடுத்துரைக்கப்படுகின்றன. அரசனுக்கு இனியது, ஆண்டிக்கு இனியது, பண்பில் இனியது முதலிய அனைத்தும் இந்நூலில் கூறப்படுகின்றன. இந்நூலைக் கற்று அதன்படி வாழ்வோமாயின் வாழ்வு நல்வாழ்வாக அமையும் என்படு திண்ணம்.

பாடல் - 01

 

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிகஇனிதே;

நற்சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்இனிதே;

முத்துஏர் முறுவலார் சொல்இனிது; ஆங்குஇனிதே,

தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

 

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அவ்வாறு கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தைப்போன்ற மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

பாடல் - 02

உடையான் வழக்குஇனிது; ஒப்ப முடிந்தால்,

மனைவாழ்க்கை முன்இனிது; மாணாதாம் ஆயின்,

நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்

தலையாகத் தான்இனிது நன்கு.

பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்து உணர்ந்து முற்றும் துறந்து துறவியாகச் செல்லுதல் மிக இனிது.

பாடல் - 03

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே;

நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே;

ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்குஇனிதே,

தேரின்கோள் நட்புத் திசைக்கு.

 

சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிது. குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிது. ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லும் திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.

பாடல் - 04

யானை யுடைப் படைகாண்டல் மிகஇனிதே;

ஊனைத்தின்று, ஊனைப் பெருக்காமை முன்இனிதே;

கான்யாற்று அடைகரை ஊர்இனிது; ஆங்குஇனிதே,

மானம் உடையார் மதிப்பு

 

அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றில் குளிக்க கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.

பாடல் - 10

கடம்உண்டு வாழாமை காண்டல் இனிதே;

நிறைமாண்புஇல் பெண்டிரை நீக்கல் இனிதே;

மனமாண்பு இலாதவரை அஞ்சி அகறல்

எனைமாண்பும் தான்இனிது நன்கு.

 

கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. ஒழுக்கம் இல்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானது இனியவை நாற்பது. இன்னா நாற்பதை அடுத்துத் தோன்றிய நூல் இனியவை நாற்பது. வாழ்க்கைக்கு வேண்டிய இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறுகிறது. ஆதலால் இந்நூலிற்கு இனியவை நாற்பது என்ற பெயர் வந்தது. இனியது நாற்பது, இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களும் இந்நூலுக்கு உண்டு. இந்த நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 பாடல்களைக் கொண்டுள்ளது. எட்டாவது பாடல் மட்டும் பஃறொடை வெண்பாவால் ஆனது. ஏனைய பாடல்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாவில் அமைந்துள்ளன.

பூதஞ்சேந்தனார்

இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். ஆசிரியர் பெயர் சேந்தன். பூதன் என்பது இவர் தந்தையாரின் இயற்பெயர். இவர் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால் மதுரைத் தமிழாசிரியர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

பூதஞ்சேந்தனார் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் சிவபெருமானையும், அடுத்துத் திருமாலையும், பின்னர் பிரம்மனையும் குறிப்பிடுகின்றார். மும்மூர்த்திகளையும் பற்றிக் குறிப்பிடுவதால் இவர் வைதிக சமயத்தினராதல் வேண்டும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

நூல் அமைப்பும் பாடுபொருளும்

தனி மனிதனுக்கு இனியது இன்னின்ன என்பது இந்நூலில் கூறப்படுகிறது. இல்லறத்திற்கு இனியவை, துறவறத்திற்கு இனியவை இவையென்று எடுத்துரைக்கப்படுகின்றன. அரசனுக்கு இனியது, ஆண்டிக்கு இனியது, பண்பில் இனியது முதலிய அனைத்தும் இந்நூலில் கூறப்படுகின்றன. இந்நூலைக் கற்று அதன்படி வாழ்வோமாயின் வாழ்வு நல்வாழ்வாக அமையும் என்படு திண்ணம்.

பாடல் - 01

 

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிகஇனிதே;

நற்சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்இனிதே;

முத்துஏர் முறுவலார் சொல்இனிது; ஆங்குஇனிதே,

தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

 

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அவ்வாறு கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தைப்போன்ற மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

பாடல் - 02

உடையான் வழக்குஇனிது; ஒப்ப முடிந்தால்,

மனைவாழ்க்கை முன்இனிது; மாணாதாம் ஆயின்,

நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்

தலையாகத் தான்இனிது நன்கு.

பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்து உணர்ந்து முற்றும் துறந்து துறவியாகச் செல்லுதல் மிக இனிது.

பாடல் - 03

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே;

நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே;

ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்குஇனிதே,

தேரின்கோள் நட்புத் திசைக்கு.

 

சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிது. குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிது. ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லும் திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.

பாடல் - 04

யானை யுடைப் படைகாண்டல் மிகஇனிதே;

ஊனைத்தின்று, ஊனைப் பெருக்காமை முன்இனிதே;

கான்யாற்று அடைகரை ஊர்இனிது; ஆங்குஇனிதே,

மானம் உடையார் மதிப்பு

 

அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றில் குளிக்க கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.

பாடல் - 10

கடம்உண்டு வாழாமை காண்டல் இனிதே;

நிறைமாண்புஇல் பெண்டிரை நீக்கல் இனிதே;

மனமாண்பு இலாதவரை அஞ்சி அகறல்

எனைமாண்பும் தான்இனிது நன்கு.

 

கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. ஒழுக்கம் இல்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.


முதுமொழிக்காஞ்சி - மதுரைக் கூடலூர் கிழார்

               

                 முதுமொழிக்காஞ்சி

                                    மதுரைக் கூடலூர் கிழார்



மதுரைக் கூடலூர் கிழார் என்னும் புலவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப்பொருள்படும். நிலையாமை கருத்துகளை உணர்த்தி உலகியல் அனுபவத்தை எடுத்துரைப்பதால் இப்பெயர் பெற்றது. இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர். பத்துப் பாடல்களைக் கொண்ட பதிக அமைப்பைக் கொண்டது. இந்நூல் 100 பாடல்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் அடியோடு தொடங்குகிறது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடுக்கி வருகின்றன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறியது நூல் இது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஒற்றை அடியால் உலக நீதிகளை எடுத்துரைக்கும் சிறப்பான நூல். 

மதுரைக் கூடலூர் கிழார்

கூடலூர் இவர் பிறந்த ஊராகவும், மதுரை பின்னர் வாழ்ந்த ஊராகவும் இருத்தல் வேண்டும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். கூடலூர்க் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்க நூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 4 உள்ளன. அவை குறுந்தொகை 166, 167, 214, புறநானூறு 229 ஆகியவையாகும். 

முதுமொழிக்காஞ்சியில் இடம்பெற்றுள்ள பத்துப் பெயர்கள் பின்வருமாறு:

வியாழன், 18 ஜனவரி, 2024

சிறுபஞ்சமூலம் - காரியாசான், பதினெண் கீழ்க்கணக்கு நூல்

 

சிறுபஞ்சமூலம்

                    காரியாசான்



 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானது சிறுபஞ்சமூலம். இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்களைக் கொண்டுள்ளது. சிலர் 97 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது என்றும் கூறுவர். இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து செய்திகளை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடல்களிலும் ஐந்து செய்திகள் இருப்பதில்லை. ஐந்து என்னும் எண்ணுத்தொகைகப் பதினைந்து இடங்களில்தான் உள்ளன. அவை, (22, 39, 40, 42, 43, 47, 51, 53, 57, 60, 63, 68, 83, 92, 92).

நூல் பெயர்க்காரணம்

பஞ்சம் என்பதற்கு ஐந்து என்று பொருள், மூலம் என்பதற்கு வேர் என்று பொருள். கண்டங்கத்தரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், நெருஞ்சில் வேர் ஆகிய ஐநது வேர்களான மருந்து உடலட நோயைத் தீர்ப்பதுபோல, மனித மனதை மேம்படுத்தும் ஐந்து நீதிக் கருத்துகளை நான்கு வரிகளில் எடுத்துரைப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். இந்நூலின் சிறப்பினை,

சிறுவழு துணைவேர், சின்நெருஞ்சி மூலம்

சிறுமல்லி கண்டங் கத்தரிவேர் - நறிய

பெருமல்லி ஓரைந்தும் பேசுபல்நோய் தீர்க்கும்

அரிய சிறுபஞ்ச மூலம். 

எனும் பழம்பெரும் பாட்டால் அறியலாம்.

காரியாசான்

 சிறுபஞ்ச மூலம் நூலின் ஆசிரியர் காரியாசான். காரி என்பது இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் வந்த பெயர். இவர் மாக்காயன் என்பவருடைய மாணவர். ‘மழைக்கை மாக்காரி யாசான் என்ற தொடர் நூலாசிரியர் கொடை வள்ளல் என்பதைப் புலப்படுத்துகிறது. இவரது காலம் நான்காம் நூற்றாண்டு. ஆசிரியர் கொல்லாமையை வலியுறுத்திக் கூறுவதால் அவர் சமண சமயத்தில் ஈடுபாடுடையவர் என்பதை அறியலாம். இந்நூலை இயற்றிய காரியாசானும் ஏலாதி நூலை இயற்றிய கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர் என்பது நினைவில் கொல்லத்தக்க செய்தியாகும்.

பாடல் - 04

கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும்

இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும், இல்லாதான்

ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும்,

நல்லார்கள் கேட்பின் நகை. 

படிக்காத ஒருவன் ஆராய்ந்து கூறும் கருத்து நுண்மைத் தன்மை உடையது என்று கூறுவதையும், காதிரண்டும் இல்லாதாதால் அழகுடையேன் என நினைத்துக் கூறுவதையும், பொருள் இல்லாதவன் இல்லாதவற்கு ஈய்வது அறியான் என்று கூறுவதையும், ஒருவன் தன்னிடம் இல்லாத பொருளைக் கொடுப்பேன் என்று கூறுவதையும் அறிவுடைய நல்லவர் கேட்டால் சிறிப்பார்கள்.

திரிகடுகம் நல்லாதனார்

 

திரிகடுகம்

நல்லாதனார்



 

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி என்றால் மூன்று, கடுகம் என்றால் காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமை நோயைப் போக்கி, வாழ்க்கைச் செம்மைபெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லாதனார்

நல்லாதனார் என்பவர் திரிகடுகம் என்ற உயிர் மருத்துவ நூலை இயற்றியவர். ஆதனார் என்பது இவரது இயற்பெயர். ‘நல்என்பது அடைமொழி. கடவுள் வாழ்த்துப் பாடலில், பூவை வண்ணன், திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சக்கரம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்று அறியமுடிகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

வியாழன், 11 ஜனவரி, 2024

ஆசாரக்கோவை, பெருவாயின் முள்ளியார்

 


ஆசாரக்கோவை

பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை

    ஆசாரக்கோவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல். ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் நீதி நூல் ஆகும். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதியவர். வெண்பாவின் வகையாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா, எனப் பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். இந்நூலில் சிறப்புப் பாயிரம் ஒன்றும் உள்ளது. ஒவ்வொரு பாடலும் அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் செய்திள் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இந்நூல் வடமொழி கருத்துக்களைப் பின்பற்றி எழுந்தது என்பதை,

     ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்

     யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை

     ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்

எனவரும் சிறப்புப் பாயிரச் செய்யுள் மூலம் அறியமுடிகிறது.    

பெருவாயின் முள்ளியார்

இந்நூலின் ஆசிரியரையும், இவர்தம் தந்தையார் பெயரையும், இவர் வாழ்ந்த ஊரையும், இவரது மதச் சார்பையும் சிறப்புப் பாயிரச் செய்யுள் நமக்கு தெறிவிக்கின்றது. இவரது முழுப்பெயர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என்பதாகும். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாய் என்பது இவரது தந்தையார் பெயராக இருக்கலாம். கயத்தூரின் ஒரு பகுதியாகிய பெருவாயிலில் இருக்கராம். அங்கு வாழ்ந்த காரணத்தால் பெருவாயின் முள்ளியார் என அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவ்ஊர் எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 'ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி' என்பதனால், இவர் சைவ சமயத்தாவராக இருக்கலாம்.

பாடல் 9 : காலை மாலைக் கடன் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

 

நாளந்தி கோல்தின்று கண்கழிஇத் தெய்வத்தைத்

தானறியுமாற்றால் தொழுதெழுக அல்கந்தி

நின்று தொழுதல் பழி.

விளக்கம்:

அதிகாலையில் எழுந்து, பல் துலக்கி, குளித்து, இறைவனைத் தனக்குத் தெரிந்த வகையில் வணங்கித் தன் கடமைகளைச் செய்யத் தொடங்க வேண்டும். மாலையில் மீண்டும் அமர்ந்து இறைவனை வணங்க வேண்டும். வணங்கும் போது நின்று வணங்கக் கூடாது.