பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானது இனியவை நாற்பது. இன்னா நாற்பதை அடுத்துத் தோன்றிய
நூல் இனியவை நாற்பது. வாழ்க்கைக்கு வேண்டிய இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் சுவைபடக்
கூறுகிறது. ஆதலால் இந்நூலிற்கு இனியவை நாற்பது என்ற பெயர் வந்தது. இனியது நாற்பது,
இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களும் இந்நூலுக்கு உண்டு. இந்த நூல்
கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 பாடல்களைக் கொண்டுள்ளது. எட்டாவது பாடல் மட்டும் பஃறொடை
வெண்பாவால் ஆனது. ஏனைய பாடல்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாவில் அமைந்துள்ளன.
பூதஞ்சேந்தனார்
இந்நூலின்
ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். ஆசிரியர் பெயர் சேந்தன். பூதன்
என்பது இவர் தந்தையாரின் இயற்பெயர். இவர் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால்
மதுரைத் தமிழாசிரியர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
பூதஞ்சேந்தனார்
கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் சிவபெருமானையும், அடுத்துத் திருமாலையும், பின்னர்
பிரம்மனையும் குறிப்பிடுகின்றார். மும்மூர்த்திகளையும் பற்றிக் குறிப்பிடுவதால் இவர்
வைதிக சமயத்தினராதல் வேண்டும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
நூல் அமைப்பும் பாடுபொருளும்
தனி
மனிதனுக்கு இனியது இன்னின்ன என்பது இந்நூலில் கூறப்படுகிறது. இல்லறத்திற்கு இனியவை,
துறவறத்திற்கு இனியவை இவையென்று எடுத்துரைக்கப்படுகின்றன. அரசனுக்கு இனியது, ஆண்டிக்கு
இனியது, பண்பில் இனியது முதலிய அனைத்தும் இந்நூலில் கூறப்படுகின்றன. இந்நூலைக் கற்று
அதன்படி வாழ்வோமாயின் வாழ்வு நல்வாழ்வாக அமையும் என்படு திண்ணம்.
பாடல்
- 01
பிச்சை புக்குஆயினும் கற்றல்
மிகஇனிதே;
நற்சபையில் கைக்கொடுத்தல் சாலவும்
முன்இனிதே;
முத்துஏர் முறுவலார் சொல்இனிது;
ஆங்குஇனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
பிச்சையெடுத்தாவது கற்பது இனிது.
அவ்வாறு கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தைப்போன்ற மகளிரது வாய்ச்சொல்
இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.
பாடல்
- 02
உடையான் வழக்குஇனிது; ஒப்ப முடிந்தால்,
மனைவாழ்க்கை முன்இனிது; மாணாதாம்
ஆயின்,
நிலையாமை நோக்கி, நெடியார்,
துறத்தல்
தலையாகத் தான்இனிது நன்கு.
பொருள் உடையவனது ஈகை இனிது.
மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை
நிலையில்லாதது என்று ஆராய்ந்து உணர்ந்து முற்றும் துறந்து துறவியாகச் செல்லுதல் மிக
இனிது.
பாடல்
- 03
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே;
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே;
ஏருடையான் வேளாண்மைதான் இனிது;
ஆங்குஇனிதே,
தேரின்கோள் நட்புத் திசைக்கு.
சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல்
செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிது. குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக
இனிது. ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது.
அதுபோல ஆராயின் செல்லும் திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.
பாடல்
- 04
யானை யுடைப் படைகாண்டல் மிகஇனிதே;
ஊனைத்தின்று, ஊனைப் பெருக்காமை
முன்இனிதே;
கான்யாற்று அடைகரை ஊர்இனிது;
ஆங்குஇனிதே,
மானம் உடையார் மதிப்பு
அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல்
இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றில் குளிக்க
கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.
பாடல்
- 10
கடம்உண்டு வாழாமை காண்டல் இனிதே;
நிறைமாண்புஇல் பெண்டிரை நீக்கல்
இனிதே;
மனமாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனைமாண்பும் தான்இனிது நன்கு.
கடன் வாங்கி வாழாமல் இருத்தல்
இனிது. ஒழுக்கம் இல்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை
விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.
பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானது இனியவை நாற்பது. இன்னா நாற்பதை அடுத்துத் தோன்றிய
நூல் இனியவை நாற்பது. வாழ்க்கைக்கு வேண்டிய இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் சுவைபடக்
கூறுகிறது. ஆதலால் இந்நூலிற்கு இனியவை நாற்பது என்ற பெயர் வந்தது. இனியது நாற்பது,
இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களும் இந்நூலுக்கு உண்டு. இந்த நூல்
கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 பாடல்களைக் கொண்டுள்ளது. எட்டாவது பாடல் மட்டும் பஃறொடை
வெண்பாவால் ஆனது. ஏனைய பாடல்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாவில் அமைந்துள்ளன.
பூதஞ்சேந்தனார்
இந்நூலின்
ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். ஆசிரியர் பெயர் சேந்தன். பூதன்
என்பது இவர் தந்தையாரின் இயற்பெயர். இவர் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால்
மதுரைத் தமிழாசிரியர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
பூதஞ்சேந்தனார்
கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் சிவபெருமானையும், அடுத்துத் திருமாலையும், பின்னர்
பிரம்மனையும் குறிப்பிடுகின்றார். மும்மூர்த்திகளையும் பற்றிக் குறிப்பிடுவதால் இவர்
வைதிக சமயத்தினராதல் வேண்டும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
நூல் அமைப்பும் பாடுபொருளும்
தனி
மனிதனுக்கு இனியது இன்னின்ன என்பது இந்நூலில் கூறப்படுகிறது. இல்லறத்திற்கு இனியவை,
துறவறத்திற்கு இனியவை இவையென்று எடுத்துரைக்கப்படுகின்றன. அரசனுக்கு இனியது, ஆண்டிக்கு
இனியது, பண்பில் இனியது முதலிய அனைத்தும் இந்நூலில் கூறப்படுகின்றன. இந்நூலைக் கற்று
அதன்படி வாழ்வோமாயின் வாழ்வு நல்வாழ்வாக அமையும் என்படு திண்ணம்.
பாடல்
- 01
பிச்சை புக்குஆயினும் கற்றல்
மிகஇனிதே;
நற்சபையில் கைக்கொடுத்தல் சாலவும்
முன்இனிதே;
முத்துஏர் முறுவலார் சொல்இனிது;
ஆங்குஇனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
பிச்சையெடுத்தாவது கற்பது இனிது.
அவ்வாறு கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தைப்போன்ற மகளிரது வாய்ச்சொல்
இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.
பாடல்
- 02
உடையான் வழக்குஇனிது; ஒப்ப முடிந்தால்,
மனைவாழ்க்கை முன்இனிது; மாணாதாம்
ஆயின்,
நிலையாமை நோக்கி, நெடியார்,
துறத்தல்
தலையாகத் தான்இனிது நன்கு.
பொருள் உடையவனது ஈகை இனிது.
மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை
நிலையில்லாதது என்று ஆராய்ந்து உணர்ந்து முற்றும் துறந்து துறவியாகச் செல்லுதல் மிக
இனிது.
பாடல்
- 03
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே;
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே;
ஏருடையான் வேளாண்மைதான் இனிது;
ஆங்குஇனிதே,
தேரின்கோள் நட்புத் திசைக்கு.
சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல்
செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிது. குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக
இனிது. ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது.
அதுபோல ஆராயின் செல்லும் திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.
பாடல்
- 04
யானை யுடைப் படைகாண்டல் மிகஇனிதே;
ஊனைத்தின்று, ஊனைப் பெருக்காமை
முன்இனிதே;
கான்யாற்று அடைகரை ஊர்இனிது;
ஆங்குஇனிதே,
மானம் உடையார் மதிப்பு
அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல்
இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றில் குளிக்க
கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.
பாடல்
- 10
கடம்உண்டு வாழாமை காண்டல் இனிதே;
நிறைமாண்புஇல் பெண்டிரை நீக்கல்
இனிதே;
மனமாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனைமாண்பும் தான்இனிது நன்கு.
கடன் வாங்கி வாழாமல் இருத்தல்
இனிது. ஒழுக்கம் இல்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை
விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for Reading