செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கவிதை, அப்பா கவிதை, அம்பலம், உப்பு மூட்டை

 


அம்பலம்

        எனக்கான குணாதிசியங்களை

        விதைக்கவே முற்படுகிறேன்

        எப்படியேனும்

        என்னை முழுக்காட்டிவிட்டு

        அம்பலமாகி விடுகின்றன

        அப்பாவின் குணாதிசியங்கள்

                      - இளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)




சனி, 28 ஆகஸ்ட், 2021

இலக்கியத்தின் சுவைக்கு வலிமை சேர்க்க வரலாறு பதிவு செய்யப்படுகிறது

 

முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


கூடுதல் வலிமைக்காக

      வாய்மொழி இலக்கியமாகத் தொன்றுதொட்டு வழங்கிவந்த பாடல்கள் பின்பு வரிவடிவம் பெற்றுச் சங்க இலக்கியமாக உருமாறின. இச்சங்க இலக்கியங்களில் அகத்திணையாயினும் புறத்திணையாயினும் பெரும்பான்மை வரலாற்று நிகழ்வு இடம்பெறாத பாடல்கள் இல்லை. அந்த அளவிற்கு வரலாறு குறித்த புரிதல்கள் சங்கப் புலவர்களிடம் இருந்திருக்கின்றது. இத்தகைய வரலாற்றுப் புரிதல்கள்தான் சங்ககால மக்களின் சிறப்புகளை உலகறியப் பறைசாற்றின.

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மொழிக் கற்றல்/கற்பித்தல் - பன்னாட்டு மாநாடு, (International Conference on Language Teaching and Learning in South East Asian countries)

 

தமிழ்த்துறை, பூசாகோஅர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி(த.) - கோயமுத்தூர்

மொழித்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(த.) - கோயம்புத்தூர்.

அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்

செம்மொழி நிறுவனம் - மலேசியா

கல்பனா கலை மற்றும் படைப்பு அகடாமி - பிரான்சு

இனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்

 

இணைந்நு நடத்தும்

 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மொழிக்

கற்றல்/கற்பித்தல் - பன்னாட்டு மாநாடு

 

International Conference on Language Teaching and

Learning in South East Asian countries

 

அறிவிப்பும் அழைப்பும்

 

நாள் : நவம்பர் 00 2021

நேரம் : முற்பகல் 10.00 - பிற்பகல் 4.00

வழி : இணையம்

 

தொடர்புக்கு :

+91 9600370671, +91 8825792051, +91 9597536324








ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

அப்பா கவிதை (சோட்டைக்கு ஒரு நாள்) Appa Kavitha

 

எவ்வளவு

வலியும் வேதனையும் இருந்திருக்கும்

இந்த வார்த்தையை  உதிர்க்க


அப்படி 

என்ன கேட்டுவிட்டார் என்னிடம்?

உன்னைப் பார்த்து ரெம்ப நாளாச்சு

சோட்டைக்கு ஒரு நாள்

வந்து தங்கிட்டுப் போடா - என்றார்


என் மகனுக்கு

உடல்நிலை சரியில்லை

அடுத்த மாதம் வரட்மா - என்றேன்


இப்படித் தானே

நானும் உன்னை வளர்த்தேன்

என்றதோடு  அணைந்துவிட்டது கைபேசி

                                               - இளையவன் தமிழ் ( ந.இராஜேந்திரன்)