சனி, 15 மே, 2021

திருத்தி எழுதப்பட வேண்டிய தமிழர் வரலாறு

 

திருத்தி எழுதப்பட வேண்டிய தமிழர் வரலாறு

முனைவர் ந.இராஜேந்திரன்,

தமிழ் உதவிப்பேராசிரியர்,

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.),

கோயமுத்தூர் – 28

 

வரலாறு உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்படாமல் உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும் என்கிறார் கா.ராஜன் (2010.1) அவ்வகையில் ஓர் இனத்தின் வரலாற்றை எழுதுவதற்கு இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டார் குறிப்புகள் போன்றவை முதன்மை சான்றுகளாக அமைகின்றன.

 

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே (நன்.சொல்.462)

 

என்ற நன்னூலார் கூற்றுக்கிணங்க சொல்லையும் பொருலையும் மட்டுமல்ல வேண்டிய போது வரலாற்றையும் கூட மாற்றி எழுதப்பட வேண்டும்

சான்றாக

      வடக்கே கரப்பா, மொகஞ்சந்தாரோ பகுதியில் வாழ்ந்த மக்களுக்குத்தான் நகர நாகரிகம் உண்டு என்பதையும் தெற்கே வாழ்ந்த தமிழர்களுக்கு நகர நாகரிகம் கிடையாது என்பதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கருத்து. இக்கருத்தை மாற்றி எழுதுவதற்கு தக்க சான்று சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த தொல் தமிழர்கள் பெரும் சுவர்கள் கொண்ட நகர்புரத்தில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன. இத்தொல்லியல் சான்றுகளை முதன்மை சான்றாகக் கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்து இளைய தலைமுறையினருக்குப் புதிய வரலாற்றைக் கடத்த வேண்டும். கடத்தும் செயலைத் தமிழக அரசே கையிலெடுக்க வேண்டும். இதன் வாயிலாக தமிழர்களின் வரலாறும் வாழ்வும் புத்துயிர்பெரும்.



 

2 கருத்துகள்:

  1. நல்ல கருத்து வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. தேவையான கருத்து. தமிழாய்வுகள் மேம்பாடு அடைய இது போன்ற கருத்து மிகத் தேவை. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

Thank you for Reading