திங்கள், 21 செப்டம்பர், 2020
பெருங்கற்காலத்தைச் சார்ந்த இடங்கள் - தயிர்ப்பாளையம், பேரோடு Megalithic Places - Sithode, Thayirpalayam, Perodu Erode Distric
புதன், 16 செப்டம்பர், 2020
திறனாய்வு நோக்கில் க.ப.அறவாணனின் தமிழ் மக்கள் வரலாறு - நாயக்கர் காலம், K.P. Aravanan's History of the Tamil People for Performance - Nayakkar Period
திறனாய்வு நோக்கில் க.ப.அறவாணனின்
தமிழ் மக்கள் வரலாறு - நாயக்கர் காலம்
முனைவர் ந.இராஜேந்திரன்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)
கோயமுத்தூர் - 28
“வரலாறு உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்படாமல் உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும்” என்ற க.ராஜனின் (தொல்லியல் நோக்கில் சங்க காலம்,ப.1) கூற்றுக்கிணங்க க.ப.அறவாணன் அவர்கள், தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம் எனும் நூலினை மிகுந்த சிரத்தையோடு உண்மைச் சான்றுகளைத் திரட்டி வரலாற்றுப் பின்புலத்தோடும் சமூகவியல் பின்புலத்தோடும் டிசம்பர் 2013 ஆம் ஆண்டில் வெளிக்கொணர்ந்துள்ளார். இவ்விரு அணுகுமுறைகளை உள்வாங்கி எழுதப்பெற்ற இந்நூலினைக் கட்டமைப்பு அடிப்படையிலும் கருத்தியல் அடிப்படையிலும் பிரித்து ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.
கட்டமைப்பு நோக்கு
2013 இல் தமிழ்க் கோட்ட வெளியீடாக வெளிவந்த இந்நூல் 302 பக்கங்களையும் 14 தலைப்புகளையும் 11 பின்னிணைப்புகளையும் உள்ளடக்கியதாக நூல் கட்டமைக்கப் பட்டுள்ளது.
இந்நூலினைச் செம்மையுற வெளிக்கொணர 509 வரலாற்றுத் தரவுகளைப் பல்வேறு இலக்கியங்களில் இருந்தும் கல்வெட்டு, செப்பேடு, வெளிநாட்டார் குறிப்புகளில் இருந்தும் தேடித் தொகுத்துள்ளார். தொகுத்த கருத்துக்களை 14 தலைப்புகளாக வகைப்படுத்தி தலைப்பின் கீழ் கால வரிசைப்படி உட்தலைப்புகளைக் கொடுத்துக் கருத்துக்களைத் தேவையான இடங்களில் விரித்தும் சுருக்கியும் பதிவுசெய்துள்ளார். அத்தலைப்புகளும் உட்பிரிவுகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு,